செவ்வாய், மார்ச் 01, 2011

வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து - அவிபத்திகர சூர்ணம்-Avipathikara choornam


வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து -
அவிபத்திகர சூர்ணம்-Avipathikara choornam
(ref-பைஷஜ்யரத்னாவளி அம்ல பித்தாதிகாரம்)


தேவையான மருந்துகள்:
1.            சுக்கு சுந்தீ                                   - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச                                - 10       “
3.            திப்பிலி பிப்பலீ                               - 10       “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ     - 10       “

5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ    - 10       “
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ                       - 10       “
7.            கோரைக்கிழங்கு முஸ்தா                   - 10       “
8.            கருப்பு உப்பு பிடாலவண                    - 10       “
9.            வாயுவிடங்கம் விடங்க                     - 10       “
10.          ஏலக்காய் ஏலா                             - 10       “
11.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              - 10       “
12.          இலவங்கம் லவங்க                        - 10       “
13.          கருஞ்சிவதை த்ரிவ்ருத்                    - 10       “

14.          சர்க்கரை ஸர்க்கர                          - 10       “


செய்முறை:   

  சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலிக்கவும். பின்னர், சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:     

 3முதல் 9 கிராம் வரை ஒரு நாளைக்கு இரு வேளைகள் உணவுக்கு முன்

.
அனுபானம்:    

தண்ணீர், தேன், பால்


தீரும் நோய்கள்: 

 வயிற்றுப் பெருமல் (ஆத்மான), மலச்சிக்கல் (ஆணாக (அ) மலபந்த), செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அரோசக (அ) அக்னிமாந்த்ய), அதிகமான ஜீரண நீர்ச்சுரப்பு (அம்லபித்த (அ) விதக்த ஜீர்ண), மூலம் (அர்ஸஸ் (அ) அர்ஷ). இது ஒரு மலமிளக்கி.


Post Comment

2 comments:

மச்சவல்லவன் சொன்னது…

சார் நான் உங்களிடம் நான்கு மாதம்முன்பு அல்சர்க்கு மருந்து எடுதிருந்தேன்,நல்ல பலன் கிடைத்தது இன்றுவரை அல்சர் வலி அறவே இல்லை.

வானவன் யோகி சொன்னது…

பொதுவாக ஆங்கில மருத்துவதில் PEPTIC ULSER என்றாலேயே குடலை முன்பெல்லாம் வெட்டி சத்திர சிகிச்சை செய்யும் ஒரு நோய் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது.

தற்போது நவீனக் கருவிகள் கொண்டு சரி செய்யப்படுகிறது என்றாலும்

இவ்வளவு அருமையான மருந்தை உபயோகம் செய்தால் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டி இருக்காது.

தகவலுக்கு நன்றிகள்.....

கருத்துரையிடுக