ஞாயிறு, மார்ச் 20, 2011

ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு


 குழந்தைகளின்/மாணவர்களின்  ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....


இன்று நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் மூலமாக -நூற்று எண்பது மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி வளர்த்திட ஆலோசனை மற்றும் ,இலவச ஆயுர்வேத மருந்துகளான -பிரம்மி கேப்ஸ்யூல் மற்றும் மாத்திரைகள் ,அறிவை வளர்க்க கூடிய மூலிகைகள் அடங்கிய டானிக்குகள் ,சாரஸ்வதாரிஷ்டம் ,ஹோமியோ மருந்துகள் அனகார்டியம் போன்றவையும் வழங்கப்பட்டன -அத்துடன் -கீழே உள்ள கட்டுரை பிரிண்ட் எடுத்து இலவசமாக  வழங்கப்பட்டது
 







குழந்தைகளின்/மாணவர்களின்  ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....

  1. திட்டமிட்டு படித்தல் தீர்க்கமான வெற்றியை தரும்
  2. ஆர்வத்துடன் படித்தல் அகலாத அறிவை தரும் -கவன குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம் -பதறவும் வேண்டாம்
  3. நிதானத்துடன் அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி
  4. படித்ததை எழுதிபார்த்தல் ,இரவில் படித்ததை நினைத்து பார்த்தல் (ரீ கால் )-பசு மரத்தாணி போல மனதில் பதியும் ,எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்
  5. ஒப்பிட்டு மனப்பாடம் செய்தல் -கற்பனை வளத்துடன் -தாய் மொழியில் யோசித்து -அனுபவித்து உணர்ந்து -சந்தோஷமாய் படித்தால் -ஜென்மத்திற்கும் மறக்காது-சிந்தித்து படியுங்கள் ..
  6. படங்களுடன் கூடிய மனதில் அதிகம் பதியும் ,பட விளக்கங்களை திரும்ப திரும்ப -பார்த்தல் எளிதில் மறக்காது
  7. இரவில் அதிக நேரம் கண் விழித்தல் -இடரை உருவாக்கும்---தூக்கமின்மை உங்கள் மூளையை துருபிடிக்க செய்திடும் .. தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும்
  8. mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை   கற்று கொள்ளுங்கள்          உதாரணம் -  news - north ,east,west,south ..இது போன்று ஷார்ட்  கீ என்னும் -ஞாபக ஒப்பீட்டை கடைபிடியுங்கள்
  9. அதிகாலை படிப்பு அற்புத பலனைத்தரும்
  10. ஞாபகம் வளர உடலும் ,உள்ளமும் நலமாய் இருத்தல் வேண்டும்
  11. தண்ணீர் அதிகம் குடித்தல் ,தரமான உணவை அளவாய் உண்ணுதல் ,காய் கறி தினமும் சேர்த்தல் -கனிவான பலனை கட்டாயம் தரும் -சரியான சக்தியுள்ள சரிவிகித உணவே உங்களை தட்டி எழுப்பும்
  12. குர் குரே ,லேஸ்,அதிகமான சாக்லேட் ,பெப்சி ,கோகோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் ,சைனீஸ் பாஸ்ட் புட் ,அதிகமான புளிப்பு ,அதிகமான காரம் ,அதிகமான எண்ணையில் பொறித்த உணவுகள் -உங்கள் அறிவை மழுங்கடிக்கும் ..உங்களை மறதி நோய்க்கு தள்ளிவிடும் அரக்கர்கள் ..
  13. தேவை இல்லாமல் சத்து மாத்திரை -என்று ஆங்கில மருந்தை உபயோகிக்காதீர்கள் -உணவில் கிடைக்கும் சக்தி வீணாய் போய் விடலாம் ..
  14. தொலை காட்சி ,வீடியோ கேம் -மோகம் தவிர்த்து ,கோபமான வேகம் தவிர்த்து -நிதானத்துடன் பிராதனமாய் நித்தியமும் செயல் பட -ஞாபகம் வருமே ..
  15. பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் ,தியானம் செய்யுங்கள் ,இலக்கை வகுத்து -வெற்றியை நோக்கி வெறியோடு -விடா முயற்சியோடு உழையுங்கள் ..வாழ்கை ஒரு முறை தான் -சாதிப்பவன் மாணவன் -  சாதனை புரிந்து -வரலாற்றில் இடம் பிடிக்கலாம் ..

மூளையை தீட்டும் ஆயுர்வேத மருத்துகள் 
சாரஸ்வதாரிஷ்ட்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின்  சாப்பிடலாம் அல்லது ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம் .  மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ,பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் ,சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் ,மேத்ய ரசாயன சூரணம்( சங்க புஷ்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் ,அதிமதுர பொடி பாலில் ,சீந்திலின் சாறு ,வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது ) சாப்பிடலாம்

சித்தா மருந்துகளில் -
வல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம்  தரலாம் ,மேலும் பல அறிவை வளர்க்கும் மூலிகைகள் சாப்பிடலாம் ..

ஹோமியோ பதி மருந்துகளில் .

.
சின்கம்
,அனகார்டியம் ,லேசெசிஸ் ,நேட்ட்ரம் மூர் ,
மலர் மருந்துகளில் பல மருந்துகள் -ஞாபக மறதியை போக்கும்


ஞாபக சக்தி வளர்க்க எனது மற்ற கட்டுரைகள் படிக்க கீழே உள்ள தளத்தி பயன்படுத்தவும்
 

 .



Post Comment

2 comments:

மச்சவல்லவன் சொன்னது…

மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த 15 யோசனைகளும் படித்து பயனடையலாம்.
நன்றிசார்.

வானவன் யோகி சொன்னது…

பல்லோரும் பயன்பெறுதல் வேண்டி தாங்கள் அளித்துள்ள இடுகை பயன்தெரிவார் கடலளவாய்க் கொள்வர் என்பது நிச்சயம்........

நீவிர் நீடு வாழவும்,,நலங்கள் பல பெறவும் நம் அனைவரின் உள்ளங்களில் நின்றிலங்கும் அந்த உயந்தவனை வேண்டுகிறேன்

கருத்துரையிடுக