ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

அறிவை -ஞாபக சக்தியளிக்கும் மூலிகைகள் -மருந்துகள் final part -படங்களுடன்


ஞாபக சக்தி பெருகிட-மூலிகைகள்.
நண்பர்களே நீங்கள் கொடுத்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..
மருத்துவனாய் எனது சேவை தொடர்ந்திட நீங்கள் அனுப்பிய மெயில் மற்றும் கருத்துரைகளுக்கும் நன்றி.

மூளையின் ஆற்றல் தெரியுமா உங்களுக்கு ?
நானூறு  பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை நான்கே மணி நேரத்தில் படித்து அதனை தலை கீழாக வொப்புவிக்கும் ஆற்றல் உடையது .இந்த உலகில் மிக சிறந்த அறிவாளியாக கருதப்படும் அதி மேதாவியும் கூட தனது மூளையின் ஆறு சதவீதத்திற்கும் மேலாக பயன் படுத்தவில்லை என்பது ஆராய்ச்சியின் முடிவு.

தேவையே கண்டுபிடிப்பின் தாய் .செல்போன் வருவதற்கு முன் பல தொலைபேசி எண்களை நாம் மனப்பாடம் செய்து தானே வைத்திருந்தோம்.இன்றோ நமது பாஸ் வேர்டை கூட நம்மால் எழுதி வைத்து கொள்ளும் நிலை.மறதி என்பது எல்லோரையும் பிடித்தாட்டும் பேயாகதான் பார்க்க முடிகிறது.நிறைய படிப்பவர்கள் ,சுறுசுறுப்போடு இருப்பவர்கள் வயதே ஆனாலும் சிலரை மறதி பிடிக்காததை நாம் பார்க்க தானே செய்கிறோம் (உதாரணம் நமது முதல்வர் )..

ஞாபக சக்தி பெருக ..
1 கவனக்குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம்.பதற வேண்டாம் .
2 நிதானத்தோடு அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி 
3 எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள் 
4 சரியான சக்தியுள்ள உணவை உண்ணுங்கள் -சரிவிகித உணவு உங்களை தட்டியெழுப்பும் .
5 ஒப்பிட்டு மனப்பாடம் செய்யுங்கள் -உங்களது கற்பனை வளத்தை அதிகபடுத்தி கொள்ளுங்கள்.
6 தூக்கமின்மை உங்களது மூளையை துருபிடிக்க செய்திடும் .
7  தேவை இல்லாமல் சத்து மாத்திரை என்றோ,ஆங்கில மருந்தையோ உபயோகிக்காதீர்கள் ..
8 பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் -வாழ்க்கை ஒரு முறை தான் -டென்ஷனை குறையுங்கள் .
௯ தலைக்கு எண்ணை வைத்து குளியுங்கள் -

மூளையை தீட்டும் ஆயுர்வேத மருத்துகள் 
1  சாரஸ்வதாரிச்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின் 
2 ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் 
3 .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்
  மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் 
பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் 
ஸ்ம்ருதி சாகர ரசம் இரவில் ஒரு மாத்திரை சாப்பிடலாம் 
சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் 
மேத்ய ரசாயன சூரணம் -சாப்பிடலாம் .
சங்க புச்பீ சூர்ணம் சாப்பிடலாம் .

சித்தா மருந்துகளில் -
வல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம்  தரலாம் 
.
பொதுவாக மேத்யம் -அறிவை வளர்க்க கூடிய மூலிகைகள் 

சரகரின் கூற்றுப்படி -
சங்க புச்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் 
அதிமதுர பொடி பாலில் 
சீந்திலின் சாறு 
வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது 

சுஸ் ஸ்ருதரின் கூற்றுப்படி -
கொடு வேலியின் வேர் -சிறிது பாலில் 
நீர் ப்ரஹ்மி யின் சூர்ணம் ,சாறு 
வசம்பின் சிறிது சூர்ணம் 
நாயுருவி 
வாய்விடங்கம் 
கடுக்காய் 
சடாமஞ்சில் 
தண்ணீர்விட்டான் கிழங்கு 
வாலுளுவை
நெல்லிக்காய் 

சரகரின் கூற்றுப்படி -
சங்க புச்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் 
அதிமதுர பொடி பாலில் 
சீந்திலின் சாறு 
வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது



சங்க புச்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் 

அதிமதுர பொடி பாலில் 
சீந்திலின் சாறு 
வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது




சுஸ் ஸ்ருதரின் கூற்றுப்படி -
கொடு வேலியின் வேர் -சிறிது பாலில் 
நீர் ப்ரஹ்மி யின் சூர்ணம் ,சாறு 
வசம்பின் சிறிது சூர்ணம் 
நாயுருவி 
வாய்விடங்கம் 
கடுக்காய் 
சடாமஞ்சில் 
தண்ணீர்விட்டான் கிழங்கு 
வாலுளுவை
நெல்லிக்காய் 


கொடு வேலியின் வேர் -சிறிது பாலில் 
நீர் ப்ரஹ்மி யின் சூர்ணம் ,சாறு 
வசம்பின் சிறிது சூர்ணம் 
நாயுருவி 
வாய்விடங்கம் 



கடுக்காய் 


சடாமஞ்சில் 




வாலுளுவை

நெல்லிக்காய் 

தொடர்ந்த ஆதரவை தாருங்கள் ..

Post Comment

6 comments:

aarul சொன்னது…

நல்ல பதிவு நன்றி

ATOMYOGI சொன்னது…

சார்! இந்த நெல்லிக்காய், கடுக்காய் படங்கள் எல்லாம் தெளிவா அழகா இருக்கு. ஆனா அதுகள எப்படி பயன்படுத்துறது. நெல்லிக்காய அப்படியே சாப்பிடலாம். ஆனா கடுக்காயை எப்படி?..... கொஞ்சம் விளக்குங்களேன்...

curesure Mohamad சொன்னது…

மாயாவி சார் ,எப்படி இருக்கீங்க ?
கடுக்காய் தோலை சூர்ணமாகி இரவில் ஒரு டீஸ்பூன் படுக்கைக்கு முன்பு சாப்பிடலாம்..கடுக்காய் ஒரு காய கல்ப மூலிகை .இரவில் கடுக்காய் சாப்பிட ஆயுள் அதிகரிக்கும் ,ஆனால் கடுக்காய் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை குறைய ,விந்தணுக்கள் குறைந்திட வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும் .

ATOMYOGI சொன்னது…

இறைவன் மற்றும் இயற்கையின் கருணையால் நான் நலமே!!!! கடுக்காயால ஆயுள் அதிகரிக்கும் ஆனா ஆண்மை குறையுமா? இது இல்லாமல் அது இருந்து என்ன பயன்...? :‍‍-)
(இந்த தளத்தை பார்வையிடுங்களேன்.http://winmani.wordpress.com/2010/02/19/cybercrime/ சைபர் கிரைம் பற்றியது. உங்களுக்கு தேவைப்படும் என்று நினைக்கிறேன்..)

curesure Mohamad சொன்னது…

மாயாவி சார்.நன்றி ..
ஆண்மையை குறைக்ககூடிய மூலிகைகள் ,இயற்கை விஷயங்களோடு சந்திக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

nalla pathiu nandri from malaysia johor bahru masai

கருத்துரையிடுக