திங்கள், பிப்ரவரி 15, 2010

நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள்


யார் சொன்னார்கள் ஆயுர்வேத சித்தா மருந்துகள் தாமதமாக வேலை செய்யும் என்று ?.
ஆங்கில மருந்துகளே தோற்று போய் நிற்கும் மர்ம காய்ச்சல் போன்ற பெயர் தெரியாத காய்ச்சலுக்கு -மூலிகை பெராசிடமாலாக விளங்கும் இந்த நிலவேம்பு கஷாயத்தில் ஒன்பது இந்த மூல பொருட்கள் சேர வேண்டும் .நிலவேம்பு குடிநீர் என்று வெறும் நிலவேம்பை மட்டும் குடித்தால் பலன் கிடைக்காது.எனவே உங்களுக்க்காக ஒன்பது மூலிகை சேர் மானங்களின்  படங்கள் .
இந்த ஒன்பது மூலிகைகளையும் கடைகளில் காயவைத்து விற்பார்கள்.சம அளவில் எடுத்து இதனை குடிநீர் பொடியாக அரைத்து வைத்துகொள்ள வேண்டும்.
இதனை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடிக்க -வந்த காய்ச்சல் ஓடும்,காய்ச்சல் தடுப்பு மருந்தாகவும் பயன்படும்.காய்ச்சல் வந்த பின் வருகிற உடல் வலிக்கும் கேட்கும்.
ஆயுர்வேதத்தில் இந்த மருந்துகளில் ஆறு மருந்தை மட்டும் வைத்து -ஷடங்க பாநீயம் எனும் கஷாயமாகவும் தருவோம்.
மேலும் சந்தேகங்களுக்கு கேள்வி கேளுங்கள் .
மேலும் எனது http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/blog-post_23.html  பாருங்கள் 



நிலவேம்பு -Andrographis paniculata


வெட்டிவேர் -vetiveria zizanoides


விலாமிச்சை வேர்-plectranthus vettiveroides
 
சந்தனம் -santalum album

பேய் புடல் -trichosanthes cucumerina

கோரை கிழங்கு -cyperus rotundus root


சுக்கு 
மிளகு 

பற்படாகம்


Post Comment

7 comments:

sunthari சொன்னது…

நல்ல தகவல். இவ்ளோ விசயத்தையும் பார்முலாவையும் வெள்ளைக் காரனிடம் கொடுத்து அவன் ஒரு மாத்திரை செய்து கொடுக்கணும் அதை ஐம்பது ருவாவுக்கு வாங்கி திங்கணும் அப்போதான் நம்மளளுக்கு காய்ச்சல் குணமாகும்.

Unknown சொன்னது…

thanks. but you forget to add kaduhu rohini this is main formula. fathah

curesure Mohamad சொன்னது…

அப்துல் நிச்சயமாக இதில் கடுகு ரோகினி இல்லை .நீங்கள் சொல்வது நிலவேம்பையா ?.நிலவேம்பின் botonical nameஉம்,கடுகுரோகினியின் botonical naem(Picrorniza kurroova) உம் வேறு வேறு .நீங்கள் சொல்வது எந்த புத்தகத்தின் refernce உள்ளது.

hamaragana சொன்னது…

அன்புடன் நண்பருக்கு வணக்கம்
தங்களின் பதிவு மிக நன்றாக உள்ளது. நன்றி
எனக்கு இது போன்ற காய்ச்சல் வந்த போது .வேப்பிலை ஈர்க்கி ,சுக்கு, மிளகு, வால் மிளகு சேர்த்து
ஒரு லிட்டர் தண்ணீரை கால் பங்காக குறைந்த தீயில் மண் பனைய்ல் காய்ச்சி மூர்னு வேலை
சிர்த்து வெல்லம் கடித்து இரண்டு நாள் சாப்பிட்டதில் உடல் வலி மூட்டு வலி இல்லை

http://machamuni.blogspot.com/ சொன்னது…

தங்கள் வலைப்பூவை பல நாட்களாக படித்து வருகின்றேன்.நல்ல பயன் உள்ள பதிவு.நம் நாட்டு மூலிகைகளையும் மருந்துகளையும் நாமே அருமை அறியாமலிருக்கும் போக்கு படித்த,படிக்காத அனைவரிடமும் உள்ளது.இறைவா உங்களைப் போல நல்ல உள்ளங்கள் இந்தப் போக்கை மாற்றட்டும்.அவர்களுக்கு இந்தப் பணியில் சலிப்பு வராமல் இருக்க அருள் புரி.
நன்றி என்றென்றும்
சாமீ அழகப்பன்

goldenking சொன்னது…

நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகள் சேர்ந்த குடிநீர் சென்னையில் எங்கு கிடைக்கும் தயவு செய்து தெரியப் படுத்துங்கள்

Unknown சொன்னது…

அய்யா வணக்கம். ஆரிய தகவலுக்கு நன்றி.
எனக்கு சில சந்தேகம்.

1. பேய் புடல் காய் சேர்த்த வேண்டுமா? இலை சேர்த்த வேண்டுமா?

2. இவற்றை பொடி செய்து குடி நீரில் கலக்க வேண்டுமா?

3. எந்த வீதத்தில் கலக்க வேண்டும்?

விளக்கம் கொடுத்தால் என்னை போன்றோருக்கு உதவியாக இருக்கும்.

நன்றி
மண்ணின் மன்னன்

கருத்துரையிடுக