ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

நோய் அணுகா விதி -பாடல்


உண்பது இருபொழுதொழிய முப்பொழுதும் உண்ணோம்.
    உறங்குவது இராவொழியப் பகலுறக்கம் செய்யோம்.
பெண்கடமை திங்களுக்கு ஓர்கால் அன்றி மருகோம்.
    பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர்-அருந்தோம்.
மண்பரவு கிழங்குகளில் கருணை-அன்றிப் புசியோம்
    வாழை-இளம் பிஞ்சொழியக் கனி-அருந்தல் செய்யோம்.
நண்பு-பெற உண்டபின்பு குறுநடையும் கொள்வோம்.
    நமனார்க்கு இங்கு-ஏது கவை நாம் இருக்கும் இடத்தே                                                                   -தேரையர் 
பிணி அணுகா விதி 
“திண்ண மிரண்டுள்ளே சிக்க லடக்காமற்
பெண்ணின்பா லொன்றைப் பெருக்காமல்- உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி.

“பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்;
பகற்புணரோம்; பகற்றுயிலோம்; பயோதரமு மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்: ஒன்றைவிடோம்: இடதுகையிற் படுப்போம்;
மூலஞ்சேர் கறிநுகரோம்: மூத்ததயிர் உண்போம்:
முதனாளிற் சமைத்தகறி யமுதெனினு மருந்தோம்:
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்:
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே”.

“உண்பதிரு பொழுதொழிய மூன்றுபொழு துண்ணோம்:
உறங்குவதி ராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்:
பெண்கடமைத் திங்களுக்கோர் காலன்றி மருவோம்:
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீ ரருந்தோம்:
மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்:
வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்:
நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம்:
நமனார்க்கிங் கேதுவை நாமிருக்கு மிடத்தே”.
- பதார்த்த குண சிந்தாமணி                                                                                                         

Post Comment

2 comments:

பெயரில்லா சொன்னது…

Vilakkam irundhaal naaladhu

பெயரில்லா சொன்னது…

Dhayavu seidhu eliya muraiyil vilakkam kodukkavum

கருத்துரையிடுக