செவ்வாய், ஏப்ரல் 25, 2017

விவசாயிக்காக ஆயுஷ் மருத்துவத்தின் ஆதரவு குரல்

விவசாயிக்காக ஆயுஷ் மருத்துவத்தின் ஆதரவு குரல்

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.M.Sc.,MBA

பட்டு  வேட்டி பற்றி அவன் கனா காணும் போது அவனது கோவணமும் உருப்பட்டது என்ற வைர முத்து வரிகளை உண்மை படுத்திய நிர்வாண விவசாய போராட்டத்தை எண்ணி கூனி குறுகியவனாக ..

விவசாயம் தொழிகளில் முதல் –ஆனால் விவசாயி வறுமையின் பிடியில்
உணவே மருந்து  ஆனால் இங்கே உரமருந்துகள் இல்லாமல் உணவே இல்லை.

பசுமை புரட்சியில் –விவசாயி சுய சார்பை இழந்து கை எந்த வைக்க பட்டான்

எல்லா தொழிலும் பாரம்பரியமாக தொடரும் விவசாயம் தவிர  ..

விவசாயம் போராட்டத்துக்கு இப்படி ஆதரவு தரலாம் பத்து கோரிக்கைகள்
  1.    நூறு நாள் வேலை வேலை வாய்ப்பு திட்டத்திற்கு விவசாயமும் –    கருவேல மர ஒழிப்பு பகுதி நாள் வேலை ஆக்கப்பட வேண்டும்          
  2.      இந்தியாவில் எந்த படிப்பு ஆனாலும் சிங்கப்பூரில் ராணுவ பயிற்சி கட்டாயம் போலே -விவசாய பயிற்சி நிச்சயம் குறைந்த பட்சம் கட்டாயமாக்கபடல் வேண்டும்                                                
  3.    எந்த கால கட்டத்திலும் கார்பரேட் மால்களில் அடிப்படை காய்கறிகளை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்                      
  4.       குறு விவசாயிக்கு நிபந்தனையற்ற கடன் வழங்க பட வேண்டும்                
  5. குறு விவாசாயியின் எல்லா பயிர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும்                                                                    
  6.        விவசாயி அங்கீகரிக்க –ஆட்சியரிடம் முதல் பல குடியரசு தலைவர் வரை பல்வேறு நிலைகளில் அவர்கள் செய்த சாதனைகள் அடிப்படையில் விருது –பண முடிப்பும் வழங்கு கௌரவ படுத்த பட வேண்டும்                                                                                                                                                   
  7.    தரிசு நிலங்களை விவசாயம் செய்ய ஒரு அமைச்சகம் அமைக்கபட வேண்டும்                                                                        
  8. .     விவசாயி உருவாக்கும் எந்த பொருளையும் அந்த அந்த ஊரு பள்ளிகளில் NSS அல்லது அதை போன்ற வேறு அமைப்புகள் மூலம் –அல்லது கல்லூரிகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல சரியான திட்ட மிடல் வேண்டும் .மக்கள் சேவையில் உள்ள Rotary,Lions club.JCI போன்ற அமைப்புகள் விவசாயத்தையும் தனது சேவையாய் செய்திடல் வேண்டும்                                                                             
  9.       விவசாயம் இல்லை எனில் இங்கே ஆயுர்வேத சித்த மருத்துவம் இல்லை –மூலிகை இல்லா உலகில் எப்படி இயற்கை வைத்தியம் பார்க்க முடியும் –எனவே –மூலிகை வளர்க்க சரியான திட்டமும் அதை கொள் முதல் செய்ய எளிதான அணுகு முறையையும் அரசு செய்ய வலியுறுத்த வேண்டும்                                                      
  10.    பாக்கெட்டில் அடைத்து விற்கும் பன்னாட்டு உணவு பொருளை முடிந்த அளவுக்கு –முடிந்தால் முற்றிலுமாக தவிர்த்து –சிறு தானிய உணவு பொருளை வாங்க உறுதி கொள்ளல் வேண்டும்.

மூலிகைகள் இங்கே அரிதாய் கிடைக்கிறது ..

விவசாயம் அழிந்தால் விவசாயி மட்டும் அழிய மாட்டான் வைத்தியனும் –அவன் சேவையை எதிர் பார்க்கும் நோயாளியும் அழிந்தே போவான் .

பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிக்கு நானே பிச்சை எடுக்கிறேன் என்ற ஒரு உணர்வோடு எந்த மனிதன் இருக்கிறானோ அவனே நல்ல மனிதன் ..நீங்களும் நானும் நல்ல மனிதர்கள்.

அரசியல் ஆக்கப்படும் இந்த போராட்டம் –உண்மையில் நாம் விவசாயிக்கு செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி நிறைய உண்டு –ஆதரவு என்று வெறும் பந்த் மட்டுமல்ல –மேலே சொன்ன பத்து கோரிக்கைகள் நிறைவேற்ற போராடலாமே

விவசாயத்தை என்றும் பெருமையாய் கருதும் ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு –அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக