வெள்ளி, செப்டம்பர் 17, 2010

ஆண்மை அளிக்கும் அப்பம்

ஆண்மை அளிக்கும் அப்பம் 
செய்முறை -
  • மீன் ,கோழி இவற்றின் மாம்சத்தை மிக சிறிய துண்டுகளாக்கி பெருங்காயம் இந்துப்பு தனியா கோதுமை மாவு -இவற்றோடு சேர்த்து பிசைந்து அப்பமாக்கி தட்டிகொள்ளவேண்டும் 
  • இந்த அப்பத்தை நெய்யில் பொரிக்க வேண்டும் .
அல்லது 
  • மீன் ,நெய் இந்துப்பு ,புளிப்புக்காடி இவற்றோடு எருமை மாம்சித்தையும் சேர்த்து வேக வைக்க வேண்டும் 
  • மாம்ச ரசம் வற்றி போன போது அதில் மிளகு ,சீரகம் ,தனியா,பெருங்காயம் ,புதிய நெய் இவற்றை சேர்த்து உளுந்து மாவை பிசைந்து அடையாக தட்டி கொள்ளவேண்டும் 
  • அந்த அடையுனுள்ளே மாம்ச பூரணத்தை வைத்து நெய்யில் பொரிக்க வேண்டும் ..
payan
  • இந்த இரண்டு வகையான தின்பண்டங்களும் விந்துவையும் ,வலிமையையும் வளர்க்கும் 
  • சிற்றின்ப வேட்கையை மிகுதிபடுத்தும் ..
  • பெருமகிழ்ச்சியான குழந்தை பேற்றினை உண்டாக்கும் ..
விந்துவை வளர்க்கும் உயர்ந்த தின்பண்டம் ..
  • உளுந்து ,பூனைகாலி விதை ,கோதுமை ,சம்பா அரிசி ,அறுபதாங் குறுவை அரிசி ,பால்முதுக்கன் கிழங்கு ,நீர்முள்ளி -இவற்றை பொடி செய்து சர்க்கரையோடு பாலுடன் அடையாக தட்டி அந்த அடையை நெய்யில் வறுத்து பாலோடு உண்டால் விந்து மிகவும் வளர்ச்சி பெரும் .

குறிப்பு -நேரமினையால் உடன் எழுத முடியவில்லை ..வாஜீகர்ணம் என்னும் ஆண்மை வளர்க்கும் வித்தை கடல் போன்று தோண்ட தோண்ட விஷயங்கள் அடங்கியது ..என்னும் நிறைய சொல்லவேண்டியுள்ளது ..மேலும் வளரும் ...தொடரும் ..

வாழ்த்துக்களுக்கு நன்றி ...

Post Comment

2 comments:

மச்சவல்லவன் சொன்னது…

வணக்கம் சார்.நல்ல மருத்துவ குறிப்புகள் தொடந்து எழதிவரும் உங்களுக்கு அன்பான நன்றிகள் சார்.

வழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி. நல்ல பல குறிப்புகள் குடுப்பதற்க்கு. ஆனாலும் சில காய்கறிகளின் பெயர்களை English மொழியில் தந்தால் நன்றாக இருக்கும்.

கருத்துரையிடுக