வெள்ளி, ஜூன் 10, 2011

தாய்ப்பால் சுரக்க உதவும் -சௌபாக்ய சுண்டி லேஹியம்


தாய்ப்பால் சுரக்க உதவும் -ஸௌபாக்ய சுண்டி
 (ref-ரஸரத்ன ஸமுச்சயம் உத்தர கண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                வெல்லம் குட            2.250 கிலோ கிராம்
                தண்ணீர் ஜல             போதுமான அளவு

                இவற்றைக் சூடு செய்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி, அதில் தனித்தனியே நன்கு பொடித்துச் சலித்த

                சுக்கு சுந்தீ                     160 கிராம்
                சதகுப்பை ஸதபுஷ்ப            100        

                இவைகளை கரைத்துக் கொதிக்கவைத்துப் பாகு பதத்தில் நெய் (க்ருத) 240 கிராம் சேர்த்துக் கலக்கி அத்துடன்

1.            கொத்தமல்லி விதை தான்யக        60 கிராம்
2.            வாயுவிடங்கம் விடாங்க              20          
3.            சிறுநாகப்பூ நாககேஸர               20          
4.            கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக           20          
5.            மிளகு மரீச்ச                        20          
6.            சீரகம் ஜீரக                          20          
7.            ஏலக்காய் ஏலா                       20          
8.            திப்பிலி பிப்பலீ                        20          
9.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       20          
10.          கோரைக்கிழங்கு முஸ்தா             20          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தையும் சேர்த்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.

 அளவும்  அனுபானமும்:   

2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள். (ஆட்டுப்பாலுடன் கொள்வது சிறப்பானது).

    தீரும் நோய்கள்:  



சீரணக் கோளாறுகள் (அக்னி மாந்த்ய), பலவீனம் (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), பிரஸவித்தப்பின்னேற்படும் கோளாறுகள் (ஸூதிகாரோக), வீட்டுவிலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவ தோஷ), தாய்பால் இன்மை, யோனி நோய்கள், ஆண்மைகுன்றுதல். இது கருப்பைக்கு வலுவூட்டவல்லது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -
  1. பிரசவத்திற்கு பின் ஆறுமாத காலம் வரை சாப்பிட -பிரசவத்திற்கு பின் வரும் உடல் எடை கூடல் ,பலஹீனம் ,தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு இன்மை ,இடுப்பு வலி ஆகியவற்றை போக்கும் ..
  2. இந்த மருந்தின் அருமை தெரிந்து -மத்திய அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பெரிய அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் அனைவர்க்கும் கொடுத்து எல்லா தாய்மார்களுக்கும் இலவசமாக கொடுக்க செய்துள்ளது ..
  3. நல்ல பசி உண்டாக்கி


               

Post Comment

1 comments:

வானவன் யோகி சொன்னது…

வாழ்த்துக்கள்...

தகவலுக்கு நன்றி...

கருத்துரையிடுக