சனி, ஏப்ரல் 22, 2017

அனுமதியின்றி விற்பனையாகும் உணவு என்ற பெயரில் மூலிகை மருந்துகள் –அபாயகரமான எச்சரிக்கை ..

அனுமதியின்றி விற்பனையாகும் உணவு என்ற பெயரில் மூலிகை மருந்துகள் –அபாயகரமான எச்சரிக்கை ..
(பாகம் ஒன்று )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS.,

முன்பெல்லாம் இந்திய மருத்துவ பிரிவில் ஒரு ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்துக்கு லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் மிக எளிதாக இருந்தது. சட்டங்கள் கடுமையாக்கபட்ட பிறகு பழங்கால சாஸ்திரிக் என்கிற மருந்துகளை மட்டும் இப்போது அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எளிதாக பெற்று விட முடியும்..அனால் பேடன்ட் மருந்துகளை அதாவது –கேப்ஸ்யூல் ,சிரப் ,மாத்திரைகளை ,டானிக் போன்ற பழங்கால கிரந்தங்களின் ரெபரன்ஸ் இல்லாமல் –பெறுவது கிட்டத்தட்ட நிறுத்தி வைக்கபட்டுள்ளது .

இந்திய மருத்துவ லைசன்ஸ் இல்லாமல் மருந்தை விற்க முடியாது என்ற நிலையில் வியாபாரிகளுக்கு கிடைக்கபட்ட ஒரு குறுக்கு வழி தான் இப்போது உள்ள FSSAI அதாவது Food safety And standards Authoriy of India  என்கிற இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து Food supplement உணவு என்கிற பெயரிலே பல்வேறு மூலிகை கலவை கலந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு வருகிறது .

FSSAI ன் முதல் முக்கிய விதியே –இந்த உணவு இதை குணமாக்கும் ,இந்த நோயை சரியாக்கும் என்று தவறான விளம்பரம் செய்யவே கூடாது என்பது தான். அதை லேபிளில் போட கூடாது .அதாவது உடலை குறைக்கும் ,நோயை நீக்கும் என்றும் அந்த உணவு பொருளின் அட்டையில் போடவே கூடாது ..அனால் இங்கே அவை பின்பற்ற படுகிறதா என்பதே மிக முக்கிய கேள்வி ..

ஒவ்வொரு உணவு பொருளுக்கும் தனி தனி லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்பது  சட்டம் ..ஒரே லைசன்ஸ்ஸில் பல பொருட்களை விற்கும் பல உணவு என்ற பெயரிலே போலி நிறுவனங்கள் இங்கே பல உள்ளது. இதை கட்டுபடுத்த ஆட்கள் பலம் இல்லை என்பதும் பெரிய உண்மை .

எந்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் உட்படுத்த படாமல் ,பல கலப்பட அங்கீகாரம் இல்லாத வேதியியல் பொருகளின் கலவையை கலந்து –வியாபாரம் பார்கிறார்கள் ..உண்மையிலே இங்கே மருந்தே உணவு என்கிற ஒரே சொல் ..மாறிப்போய் உணவே மருந்து என்று போலியாய் வளம் வருகிறது. அதில் உள்ள சேர்மானங்களை கட்டுபடுத்த முடியாது என்பது போய் அதன் விலையையும் கட்டுபடுத்த முடியாத நிலை உருவாக்கி –பூதாகரமாகி உள்ளது என்று மக்களுக்கு தெரியப்படுத்த பெரிய ஒரு பயம் வருகிறது .



விழிப்புணர்வே இக்கண தேவை என்று அடிப்படையில் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன் .

“உணவே மருந்து. மருந்தே உணவு"  என்கிற மகத்தான தத்துவத்தை இங்கு எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை..இந்த தத்துவம் பாக்கெட்டில் அடைத்து விற்கும் எந்த உணவு என்ற பொருளுக்கும் பொருந்தாது .

வகை வகையாக உண்டதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கேடுகள் தான். வரை முறையில்லா உணவுப்பழக்க வழக்கங்களால் பல வியாதிகள் குறிப்பாக மலச்சிக்கல், அதைத் தொடர்ந்து தலைவலி, அஜீரணம், வாயுத்தொல்லை என ஏராளம். ஆனால், இவையெல்லாம் இயற்கை உணவு முறைக்கு மாறிய பிறகு இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும். நமது வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் நம் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் உள்ளது என்பதை பலரும் அறிந்ததில்லை.

முதலில் ஒரு மனிதனுக்கு சாப்பாட்டைஎப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்பது தெரிகிறதா என்பது சந்தேகம் தான். அசனம், ஆசனம் என இரண்டை மனிதன் கடைப் பிடித்தாலே வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ முடியும். அசனம் என்பது நாம் உண்ணும் ஆகாரத்தையும், ஆசனம் என்பது யோகாசனத்தையும் குறிக்கும்.அசனம் என்கிற இயற்கை சார்ந்த ஆஹாரம்.

பச்சைக்காய்கறிகள், பழ வகைகள்,கஞ்சி, கூழ் என ஏதோ ஆதிகால மனிதர்களைப் போல எல்லோரும்சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் கிடையாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத சமைத்த உணவு இரண்டு வேளையும், இயற்கை உணவு ஒரு வேளையும் உண்டாலே போதுமானது.

ஆனால், நாம் எத்தனை பேர் இயற்கை தரும் ஆரோக்கிய உணவை விடுத்து டப்பாக்களில் விற்கும் மருந்துகளை உணவு என்று வாங்குகிறோம்.

பாலில் இல்லாத calcium-அ நமக்கு calcium மாத்திரை தரபோகிறது.

பழங்களில் இல்லாத Vitamin-களா நமக்கு Vitamin மாத்திரை தரபோகிறது.

அளவுக்கு அதிகமான விட்டமின்கள் எவ்வளவு பெரிய ஆபத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

நம்மில் பெரும்பாலோனோர் இப்படி தான். இயற்கை தரும் பழங்களை விடுத்தது, Vitamin Tablet-களை வாங்கி செல்கிறோம், கூடவே பக்கவிளைவுகளையும் இலவசமாக வாங்கிசெல்கிறோம்.

அங்கீகாரம் கிடைக்காத மருந்துகளை உணவுகள் என்று விற்கிறார்கள். அதையும் நாம் நம்பி ஏமாந்து வாங்குகிறோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மிகவும் பெயர்போன நிறுவனம் ஆன ஆMWAY Product-இல் வரும் ..ந்utrilite Cal Maக்-d, ..ந்utrilite Bio-சி .., ..ந்utrilite Iron Folic Tablets, ..ந்utrilite ..நேatural-B Tablets ஆகியவை மருந்துகள் FSSAI-இல் நிராகரிக்கப்பட்டவை. இதில் Calcium மற்றும் Magnisium அளவுக்கு அதிகமாக இருப்பதே இது நிராகரிகப்பட  காரணம். இதை பயன்படுத்துபவர்களுக்கு வேறு பல உபாதைகளும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. விலையோ யானை விலை ,குதிரை விலை

இதேபோல், “Forever Version” இவை Ultra-Violet Radiation தடுக்க பயன்படுகிறது. ஆனால் இதை உணவு போல் உட்கொள்வதால் கண்களில் மற்றும் நாக்கில் வறட்சி ஏற்ப்படுதல், சுவாச கோளாறுகள், வாந்தி, மயக்கம், தலை வலி போன்றவை ஏற்படும் .

இதே போல் 400-க்கும் மேற்ப்பட்ட பொருட்களை FSSAI (Food Safty & Standard Of India)  நிராகரிக்கப்பட்டவை.

இதனால், நாம் உணவு பொருட்கள் என்று கடைகளில் கிடைக்கும் டப்பாக்களை (Bottle Products) தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

அதேபோல், உடலில் ஏதேனும் பிரச்சனைகளுக்கு, சுயமாக மருந்து எடுத்துகொள்ளாமல் தகுந்த மருத்துவ பாரம்பரியமான முறையான AYUSH-ஐ பயன்படுத்தி நோயின்றி வாழலாம்.

தக்க ஆயுர்வேத சித்த யுனானி இயற்கை நேச்ரோபதி –ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை     9043336000

Post Comment

1 comments:

ராஜி சொன்னது…

நல்ல பகிர்வு

கருத்துரையிடுக