சனி, மே 02, 2020

கோடையை (கொரோனாவையும்) கடந்து செல்ல...

கோடையை (கொரோனாவையும்) கடந்து செல்ல...


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

தினசரி உடல் சீராக இயங்க உடல் கழிவுகளை (மலம், ஜலம் ) வெளியேற்றுவது அவசியம்... அதே போல் பருவகால மாற்றத்திற்கு ஏற்றவாறு உடலில் மாறுபடுகின்ற மூன்று தோஷங்களை (வாத, பித்த, கபம் ) வெளியேற்றி சீராய் வைத்துக்கொள்வது அவசியமாகும்...

பருவகால மாற்றத்தினால் உடலில் உண்டாகும் மாறுதல்கள், நோய்கள் அவற்றை சரிசெய்யும் முறையை ஆயுர்வேதம் ரிதுசரியை (seasonal regimen) என்னும் தலைப்பில் விவரிக்கிறது...

இவற்றை பின்பற்றுவதினால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கிறது..

ஆயுர்வேத மருத்துவம் கூறும் காலபருவங்கள்... 

*ஷிஷிர (டிசெம்பர் - ஃபிப்ரவரி)*
பணி காலம்.. பனியினால் குளிர்ந்த காற்று வீசும்.. சருமத்தில் வறட்சி தென்படும்.. குளிர் மிகுந்து வெயில் தாக்கம் குறைவதால் உடலில் கபம் (சளி / கோழை ) அதிகரிக்கும் காலம்.. பசி அதிகரிக்கும், உடல் பலம் கூடும்..

உடலில் சளி உறைய வாய்ப்புகள் அதிகம்..

இதனை தவிர்க்க வெதுவெதுப்பான எண்ணெய் (நாராயண தைலம், பலா தைலம் சிறந்தது ) குளியல், முழு உடல் ஒற்றடம், நீராவி குளியல் சிறந்த பலனை தரும்...

சைனஸைடிஸ், ஆஸ்துமா, உடல் பருமன், தைராய்டு, உடல் வீக்கம் உள்ள நோயாளிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இம்முறைகளை பின்பற்றலாம்...

*வசந்த (ஃபிப்ரவரி - ஏப்ரல்)*
பணி குறைந்து வெயில் அதிகரிக்கும் காலம்... பகல் பொழுதில் சூரியன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாவதினால் உடல் பலம், பசி, செரிமானம் குறைய தொடங்கும்..

உஷ்ணதினால் உடல் நீர் சத்து குறைய தொடங்கும்.. உறைந்த சளி நீர்த்து வெளிவரும்...

தீர்வு .. எண்ணெய் (சகசராதி தைலம், கடுகெண்ணெய், எள் எண்ணெய், வேப்ப எண்ணெய் சிறந்தது)  குளியல், மண் குளியல் சிறந்த பலனை தரும்..

உடல் பருமன், நீர்த்த சளியினால் அவதிபடும் நோயாளிகள் வமனம் மற்றும் நஸ்ய சிகிச்சை பெற அறிவுறுத்தபடுகிறது..

*கிரரீஷ்ம (ஏப்ரல் - ஜூன் )*
வெயில் காலம்.. கடுமையான சூரியன் தாக்கத்தால் உஷ்ணமா காற்று வீசும்... உடல் மிகுந்த நீர் சத்தை இழந்து வறண்டு போகும்... உடல் முழுவதும் பலவீனம் ஆகும்..

பசியின்மை, செரியாமை, மலசிக்கல், ஒற்றை தலைவலி, மூலநோய், வாய் புண், அல்சர், நோய் தொற்று அதிகரிக்கும்..

தீர்வு நெய் கலந்த உணவு, சினேகபானம் சிகிச்சை நல்ல பலனை தரும்.

பிற சிகிச்சைகளை தவிர்ப்பதே சிறந்தது..

*வர்ஷ (ஜூன் - ஆகஸ்ட் )*
மழை காலம்.. குளிர்ந்த காற்று வீச துவங்கும்.. உடல் பழைய பலவீனத்திலிருந்து முன்னேற முற்படும்...

பசி, செரிமானம் முன்னேறும் செயல்பாடுகளினால் உடலில் பித்தம் அதிகரிக்கும்...

பித்தம் அதிகரிப்பு நெஞ்செரிதல், புளித்த ஏப்பம், மஞ்சள் காமாலை, முடியுதிர்வு, ஜுரம், வயிற்று போக்கு போன்றவற்றை உண்டாக்கும்..

தீர்வு விரேசனம் எனப்படும் பேதி உண்டாகும் சிகிச்சை சிறந்த பலனை தரும்..சூரிய குளியல் செக்கு எண்ணெய் உணவில் சேர்த்துக்கொள்ளவும் இந்த பருவகாலத்தில் அறிவுறுத்தபடுகிறது.

*சரத் (ஆகஸ்ட் - அக்டோபர் )*
காற்று காலம்.. அதிவேகத்துடன் காற்று வீசுவதினால் உடல் வறண்டு, உஷ்ணம் கூடுகிறது..

உடல் பலம் மற்றும் பசி மிதமான நிலையில் உள்ளது... இவற்றை தூண்ட ஒற்றட சிகிச்சை, இரத்தம் வெளியேற்றும் சிகிச்சை,  நெய் கலந்த உணவு பின்பற்றவேண்டும்.

*ஹேமந்த (அக்டோபர் - டிசம்பர்)*
சூரியன், மழை, காற்று கடந்து பணி துவங்கும் காலம்..

உடல் பலம் மிகுந்து, பசி முற்றிலும் தூண்டப்பெற்று, நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கும்..

இவற்றை பாதுகாத்துக்கொள்ளவும், அதிகரிக்கவும் எண்ணெய் குளியல், நீராவி சிகிச்சை சிறந்தது.

ஆயுளை வளர்க்க வழங்கபட்ட வேதமே ஆயுர்வேதம்... எனினும் தக்க மருத்துவரின் மருத்துவ ஆலோசனை படி மேற்கூறியவற்றை  பின்பற்றினால் நல்ல  பலனை பெறுவது உறுதி..

ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277 577
சென்னை 9043336000

Post Comment

1 comments:

தமிழ் மொழி சொன்னது…

அருமை

கருத்துரையிடுக