சனி, மே 16, 2020

மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்


ரசாயன சிகிச்சை என்றால் என்ன  ?

ரசாயனம் என்ற சமஸ்க்ருத வார்த்தையின் பொருள் - நோய் தவிர்த்து, இளமையை நீடித்து, புலன்களை சீராகி, வீர்யத்தை ஊக்கப்படுத்தும் சிகிச்சை....என்பதாகும். இன்னும் சுருக்கமாக சொன்னால் அமிர்தம்.


*எதற்காக இச்சிகிச்சை?*

நாம் அனைவருமே வாழ்க்கை போராட்ட களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களே... இதற்கிடையில் நாம் செய்யும் தவறுகள் ஆதாவது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், ஓய்வின்மை, உணவு பொருட்களின் கலப்படத்தால் உடலில் சேரும் நச்சு, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறியினால் உடலில் சேரும் விஷம், இரவு நேர வேலை (தூக்கமின்மை ), பகல்தூக்கம், உடற்பயிற்சியின்மை, கவலை, கோபம், பயம், மனஅழுத்தம் போன்றவற்றால் நரம்புகள் தளர்ந்து, எலும்புகள் தேய்ந்து, எழுப்பு மஜ்ஜை வற்றி, தசைகள் வலுவிழந்து, அதிக கொழுப்பு, இரத்தகுழாய் அடைப்பு, கருத்தரிப்பின்மை, விந்து குறைபாடு, சோர்வு, இயலாமை, மறதி, பொலிவின்மை முதலான பல நோய்களுக்கு ஆளாகின்றோம்... இதனாலேயே பலருக்கும் அகால மரணம் ஏற்படுகிறது... இத்தகைய காரணங்களால் ஏற்படும் வயது முதிர்வு, நோய்த்தாக்கம், அகால மரணத்தை தவிர்க்கவே கூறப்பட்டுள்ளது ரசாயன சிகிச்சை...


என்ன பயன்?*

ரசாயன மருத்துவதினால் நரம்புகள், எலும்புகள், தசைகள், எலும்புமஜ்ஜை அனைத்தும் வலுப்பெறுகிறது, அதிக கொழுப்பு, இரத்தக்குழாய் அடைப்பை சீர்செய்கிறது, பெண்மை, ஆண்மை குறைபாட்டை நீக்கி சிறந்த ஆரோக்கியமான சந்ததியினரை பெற வழிசெய்கிறது, புத்திகூர்மை, பகுத்தாய்வு திறன் மேம்பட்டு நிம்மதியை தருகிறது... இவை எல்லாவற்றால் வயது முதிர்வு தடுக்கப்பட்டு, வாழ்நாட்கள் நீடிக்கப்படுகிறது...


சிகிச்சையை_எவ்வாறு_பெறலாம் ?*

ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது ரசாயன மருத்துவம்.


குடிப்பிரவேசிக ரசாயனம், ஆச்சார ரசாயனம், அசார ரசாயனம், திரவ்ய ரசாயனம் என பலவாறாக பின்பற்றப்படும் ரசாயன மருத்துவம் வகைகளுள் பின்பற்ற எளிதாய் இருப்பவை திரவ்ய ரசாயன மருத்துவம்.


குறிப்பிட்ட சில ஆயுர்வேத மருந்துகளை (அமிர்தத்திற்கு நிகரான மேன்மை குணங்களை கொண்ட மூலிகைகளால் செய்யப்பட்ட ) நாள்தோறும் குறிப்பிட்ட அளவு உண்பதினால் ரசாயன மருத்துவத்தின் பலன்களை எளிதாக பெறலாம்..


அவ்வாறான ஆயுர்வேத ரசாயன மருந்துகள்...
ச்யவனப்ராஷம்
ஹரிதகி ரசாயனம்
ப்ரம்ம ரசாயனம்
விடங்காவலேகம்
பிப்பலி ரசாயனம்
சிலாஜது ரசாயனம் மகரத்துவஜ ரஸ்
வசந்தககூஸ்மாரா ரஸ்


குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ?*

பிரத்யேகமாக குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடுபவை..
சரஸ்வதாரிஷ்டம்
வல்லாரை கீரை சாறு
அதிமதுர சூர்ணம்
சீந்தில்கொடி சாறு
சங்குபுஷ்பி சூர்ணம்


குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ரசாயன மருத்துவதினால் அவர்களின் ஞாபக திறன், திறமை, உடல் ஆற்றல், இளமை, பொலிவு, கவர்ச்சி, குரல் வளம், புலன் ஆரோக்கியம், மனோபலம், நேர்மை, தீய பழக்கங்களுக்கு செல்லாதிருத்தல், வாழ்நாள் போன்றவை அதிகரித்து நீள்கிறது...


எந்த வயதினருக்கும் பொருந்தும் இம்மருத்துவம் கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களில் பின்பற்றுவதால் சிறந்த நோயெதிர்ப்பு ஆற்றலை பெறுவதோடு ஆரோகியமான சமுதாயத்திற்கு துணைசெய்யலாம்... ஒவ்வொரு தனி மனித ஆரோக்கியமே நாட்டை வல்லரசு பாதைக்கு கூட்டிசெல்லும்.


எந்த மருத்துவமும் மருத்துவர் ஆலோசனைக்கு உட்பட்டு எடுப்பதே சிறந்தது...

மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக