வெள்ளி, மே 01, 2020

மறுபிறவி ஆரோக்கியம்...

மறுபிறவி ஆரோக்கியம்...

டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

பிரசவத்தின் போது பெண்கள் அடையும் வேதனைகளால்...சுகப்பிரசவம் அல்லது அறுவைசிகிச்சை போன்றவற்றால்.. பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்றும் இன்னும் பலவாறாக விமர்சனங்கள் உண்டு...

இன்னும் 50% பெண்களுக்கு தாய்மை என்பது கனவு போல் ஆகி வருகிறது.. கர்பம் தரிக்காமல் அல்லது கர்பம் தரித்து தங்காமல் களைவது, பிரசவத்தில் சிக்கல், போன்ற பிரச்சனைகள் பல குடும்பங்களை நரக வேதனையில் தள்ளிக்கொண்டிருக்கிறது...

IUI, IVF போன்ற அறிவியல் நுட்பங்களும் பல பெண்களின் வாழ்க்கையில் தாய்மைக்கு வழிசெய்ய போராடி தோற்று நிற்கிறது...

போதாக்குறைக்கு குழந்தை பிறந்தாலும் ஆரோக்கிய குறைபாட்டுடன்... அதாவது Type 1 Diabeties எனப்படும் சர்க்கரை வியாதி, மூளை வளர்ச்சி குறைபாடு, மஞ்சள் காமாலை, பல நோய் தொற்றுகளால் (இதில் கொரோனாவும் உண்டு ) குழந்தை பிறந்து இறந்து போகும் அவலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்....

தீர்வு முழுக்கமுழுக்க கர்ப்பகாலத்தில் கர்பிணி பெண்களின் உணவு வழக்கத்தில் மட்டுமே உள்ளது...

சுகமான பிரசவத்திற்கு ஆயுர்வேத அணுகுமுறை ..


*உணவே மருந்து, மருந்தே உணவு...* இவாறாக சூக்ஷ்மத்தை தருகிறது ஆயுர்வேதம் ப்ரசூதிதந்த்ரம் எனும் நூல் வழி ...

மசானுமாசிகம்...
( மாதாந்திர உணவு விதிமுறை... )

பொதுவான உணவு விதிமுறை..
தேநீர், காபி, இதர குளிர்பானங்கள் தவிர்த்தல் வேண்டும்.
அதிக உஷ்ணமான அல்லது சூடாக எந்த உணவையும் சாப்பிட கூடாது.
பசித்தால் மட்டுமே போதிய அளவு உணவு உட்கொள்ளல் வேண்டும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.
அஜீரணத்தை உண்டு பண்ணும் ஆரோகயமற்ற உணவுகளை தவிர்த்தல் வேண்டும்...

*மாதம் ஒன்று..* 
தண்ணீர் கலந்த காய்ச்சப்பட்டு ஆரிய குளிர்ந்த பாலில் தேன் / நாட்டுச்சர்க்கரை / பனைவெல்லம் / பனைக்கற்கண்டு  சேர்த்து இருமுறை பருக வேண்டும்...
வெண்ணை, நெய் கலந்த உணவு உட்கொள்ளல் வேண்டும்..
அதிமதுரம், நீர்மல்லி / மூவிலைபுன்னை, பலாசம் / கிஞ்சுகம், உந்நு / பலிச்ச, இலுப்பை மூலிகைகளை தேன் அல்லது வெண்ணையில் எடுத்துக்கொள்ள வேண்டும்...

*மாதம் இரண்டு..*
அதிமதுரம் அல்லது காகோலி சேர்த்து காய்ச்சிய பால் குளிர்ந்த பின் அருந்த வேண்டும் , நீர் ஆகாரங்கள் பழரசம், மோர் போன்ற உணவுகள் அதிகம் உட்கொள்ளவேண்டும்...

*மாதம் மூன்று..*
பாலுடன் தேன், உருக்கப்பட்ட நெய் சேர்த்து அருந்த வேண்டும்.
நவரை அரிசி சாதம் பால் சேர்த்து உண்ண வேண்டும்.
பருப்புவகைகள் சேர்த்து சமைக்கப்பட்ட சாதம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

*மாதம் நான்கு..*
நவரை அரிசி பால் சாதம்.
நவரை அரிசியில் தயிர் சாதம் அல்லது வெண்ணை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசைவ ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

*மாதம் ஐந்து..*
நெய் கலந்த சாதம் அல்லது நெய் கலந்த உணவு உண்ண வேண்டும். 
தானியங்கள் அல்லது பால் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு சாப்பிட வேண்டும்.
பால் கலந்த சாதத்துடன் தேன், நாட்டுச்சர்க்கரை கலந்து உண்ண வேண்டும்.

*மாதம் ஆறு..*
அதிமதுரம் நெய் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெருஞ்சில் முள் பொடியுடன் நெய் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தயிர் மற்றும் நாட்டுச்சர்க்கரை கலந்து உண்ண வேண்டும்.

*மாதம் ஏழு..*
சர்க்கரை வள்ளி கிழங்கு உண்ண வேண்டும்.
நெய், இனிப்பு கலந்து சமைக்கப்பட்ட உணவு வகைகள் சாப்பிட வேண்டும்.

*மாதம் எட்டு..*
மாமிசம் ரசம் பருக வேண்டும்.
குறுந்தொட்டி கஷாயமாகவோ அல்லது பாலில் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
எள் மற்றும் நெய் அல்லது தேன் கலந்து உண்ண வேண்டும்.

*மாதம் ஒன்பது..*
யோனி பிச்சு எனப்படும் மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும்.
பருப்பு வகைகள், தானியங்கள் அதிகம் உண்ண வேண்டும்.

*பலன்கள்..*
குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு தீர்வு.
நீர் வறட்சியை தவிர்க்க முடிகிறது.
தாய், சேய் இருவருக்கும் போஷாக்கு உண்டாகிறது.
இரும்பு, புரதம் போன்ற சத்துக்கள் குறைபாட்டை தவிர்க்கமுடிகிறது.
பாத வீக்கம் போன்றவற்றிற்கு தீர்வு.
மலச்சிக்கலை சரிசெய்கிறது.
கரு சிதைவு தவிர்க்கப்படுவதோடு நிச்சயமாக ஆரோக்கியமான, சிக்கல் இல்லாத பிரசவத்திற்கு வழி செய்கிறது.



மரணமில்லா பிரசவத்திற்கு உதவ பகிர்வோம்...

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்..


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக