சனி, மே 16, 2020

அடங்(க்)காமை நன்மை தரும்...


அடங்(க்)காமை நன்மை தரும்...

அடங்காமை நன்மை தரும்


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகளுள் ஒன்று த்ரிமலா... அதாவது மூன்று உடல் கழிவுகளை அடக்காமல் வெளியேற்றுவது நம்மை நோயிலிருந்து பாதுகாக்கும்...


நோய்களுக்கான அறிகுறிகளை காண ஆயுர்வேதம் மூன்று பெரிய தொகுப்புகளை வழங்குகின்றது அவை....


1.திரிதோஷம் (வாதம், பித்தம், கபம் )
2.சப்ததாது (ரசா, ரக்த/குருதி , மாம்ச/தசை , மேதஸ்/கொழுப்பு , அஸ்த்தி/எலும்பு , மஜ்ஜா/எலும்பு மஜ்ஜை , சுக்ர/விந்து, கருமுட்டை)
3.த்ரிமலா (மூத்திரம், புரீசம் /மலம், ஸ்வேதம் /வியர்வை ).


மூன்றாவது தொகுப்பான த்ரிமலா... மூன்று வகை உடல் கழிவுகளை வெளியேற்றாமல் அடக்குவதால் மிகுதியான நோய்கள் உடலில் உண்டாகின்றன...


பொதுவாக பலரும் அறிந்த ஒன்று சிறுநீர் அடக்குவதால் சிறுநீரக கற்களும், மலத்தை அடக்குவதால் மூலம் போன்ற நோய் வரும் என்பது... ஆனால் இப்பதிவில் கூறவருவது அதுக்கும் மேல...


ஒரு உதாரணம் ... வீட்டிற்கு வெளிய உள்ள கழிவுநீர் கால்வாய் அடைபட்டால் என்னவாகும்...? கழிவுநீர் கால்வாய் நிரம்பி அதற்கான பாதையை விட்டு வெளியேறி வீட்டை சுற்றி நிறையும், அதோடு வீட்டின் உள்ளே இருக்கும் அனைத்து வடிகால் வழியாக கழிவுநீர் வீடு முழுக்க நிரம்ப ஆரம்பித்துவிடும்... மொத்தத்தில் துர்நாற்றம், கிருமி, விஷஜந்துக்கள் என வீடே நாசமாகிவிடும்...



அதே போன்ற நிகழ்வுகள் தான் நம் உடலிலும்..

நினைத்துக்கூட பார்த்திடாத பல நோய்களும் இந்த மூன்று கழிவுகளை அடக்குவதால் உண்டாகிறது... ஒவ்வொன்றாய் காண்போம்...


*1.சிறுநீர்...*

சிறுநீர் வெளியேறுவதற்கான காரணம்.. உடலில் உள்ள இரத்தம் சுமார் ஏழு முறை சிறுநீரகத்தால் சுத்தீகரிக்கப்பட்டு சிறுநீர் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர், உப்புச்சத்து, நச்சுக்களை வெளியேற்றி பாதுகாக்கிறது... அதனால் தான் சரியான இரத்தஅழுத்தத்துடன் உடல் சீராய் இயங்கமுடிகிறது...


சீறுநீர் பையில் தேங்கியிருக்கும் சீறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதால் சிறுநீரகம், சிறுநீரக குழாய், சிறுநீர்பை முதலியவற்றில் கற்கள் உண்டாவதோடு, சிறுநீரக செயலிழப்பு, நீர்க்கட்டி, நோய்த்தொற்று போன்றவை தோன்றுகிறது. மேலும் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல், முகம் மற்றும் உடல் முழுவதும் வீக்கம், பிராணவாயு பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், இரத்தஅழுத்தம் பாதிக்கப்பட்டு தலைசுற்றல், சில சரும வியாதிகளும் உண்டாகிறது.



2.மலம்...*

மலம் வெளியேறுவதற்கான காரணம்... நாம் உண்ணும் உணவில் இருக்கும் உடலுக்கு தேவையானவற்றை சிறுகுடல் உரிந்துகொண்ட பிறகு எஞ்சி இருக்கும் வேண்டாதவற்றை பெருங்குடலுக்கு தள்ளி அங்கே மறுபடியும் நீர்சத்து, எலெக்ட்ரோலைட்ஸ், சில வைட்டமின்கள் (vit k, vit D) பெருங்குடலால் உரியப்பட்டு வெறும் நார் நிறைந்த மலமாக வெளியேறுகிறது...

மலமானது rectum, anus வழியாக வெளியேற வேண்டும்.. வெளியேற்றாமல் அடக்குவதால் மூலம், பௌந்தரம் போன்றவை உண்டாவதோடு, கிருமிகள் உருவாவதினால் வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுபொருமல், பசியின்மை, செரியாமை, சுவையின்மை தோன்றுகிறது. மேலும் செரிமான பாதிப்பால் சிறுகுடல் செயல்பாடுகள் பாதிப்படைந்து சத்துக்களை உரிந்துகொள்ள முடியாமல் உடல் பலவீனம் அடைகிறது, பிராணவாயு பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், தலைசுற்றல் உண்டாகிறது. Metabolism பாதிக்கப்படுவதால் தேவையற்ற இடங்களில் கொழுப்பு படிவது, தொந்தி /தொப்பை உண்டாவதற்கு காரணமும் இதுவே.

3.வியர்வை...*
வியர்வை வெளியேற காரணம்....முக்கிய காரணம் நமது உடல் தட்பவெட்பத்தை சீராக வைத்துக்கொள்வதற்கே. வியர்வையில் உப்புடன் நீர் மட்டுமே வெளியேறுகிறது. இதனால் சரிவிகித நீர் மற்றும் உப்பு சத்துடன் இரத்த ஓட்டம் சீராகிறது. வியர்வையால் உண்டாகும் எண்ணெய் தன்மை மாசு, கிருமிகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.


வியர்வையை எப்படி அடக்கமுடியும் என யோசிக்கிறீர்களா?... பலரும் அவரவருக்கு தெரியாமலேயே வியர்வை வெளியேறுவதை தவிர்க்கிறார்கள். ஏ.சி பயன்பாடு வியர்வை வெளியேறுவதை தடுக்கிறது. இவ்வாறு வியர்வை வெளியேறுவதை தடுப்பதினால் சருமம் பாதிப்படைகிறது. சருமம் வறட்சியால் பொலிவை, மிருதுதன்மையை இழக்கிறது. பல சரும நோய்களும் உண்டாகிறது.


பணியிடங்களில் ஏ.சி பயன்பாட்டை தவிர்க்கமுடியாது என்பது உண்மையே... ஆனால் வீட்டில் ஏ.சி தவிர்த்து, சரியான உடற்பயிச்சி மேற்கொண்டு வியர்வை வெளியேற்றுவதால் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்கலாம்.


இந்த மூன்று மலங்கள் நாள்தோறும் வெளியேறியாகவேண்டும்... வேலை நிமித்தமாக நீங்கலாக அடக்குவதும், உபாதையாக மலங்கள் வெளியேறாமல் அடங்கியிருப்பது ஆரோக்கியத்தை சீர்குலைத்து நோயின் வாசலில் கொண்டுநிறுத்தும். தக்க மருத்துவ ஆலோசனையுடன் மலச்சிக்கல்களை நீக்க இன்றே முனைந்திடுவீர்...

ஆலோசனைக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக