சனி, மே 16, 2020

இனி ஒளிந்துகொள்ள வேண்டாம்...


இனி ஒளிந்துகொள்ள வேண்டாம்...



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்



உடல் ஆரோக்கியம் அல்லது போஷாக்கிற்காக குழந்தை, பெண்கள், இளைஞர், வயோதிகர் என அனைவரும் ஒரு ஊட்டச்சத்து பானம் எடுத்துக்கொள்கிறோம்.



வளரும் குழந்தைகளுக்கு Complan, junior horlicks, பெண்கள், கர்பிணிகளுக்கு womens horlicks, இளைஞர்களுக்கு boost, maylo இன்னும் பலவகையான போஷாக்கிற்கான பானம், அதற்கான விளம்பரங்கள் மனதை மயக்கும் பிளேவர்களில் வந்தவண்ணமே உள்ளது. பழகிவிட்டால் இதுவும் ஒருவகை போதை அடிமையே...



அப்படி எடுத்துக்கொள்ளும் குழந்தைகளும், பெண்களும், இளம்வயதினரும், முதியோரும் எந்த நோயுமின்றி ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்றால்...கண்டிப்பாக இல்லை.



குழந்தைகள்  நோயெதிர்ப்பு சக்தியின்றி, பெண்கள் எழுப்புகள் பலமின்றி, ஆண்கள் நரம்பு பலமின்றி, முதியோர்கள் தங்களது சுயவேலைகளை தானே செய்துகொள்ளும் உடல் ஆற்றல் கூட இல்லாம உள்ளனர்.


குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் போஷாக்கிற்காக, ஊட்டச்சத்திற்காக, நோயெதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளவேண்டியது அஸ்வகந்தா மட்டுமே...


அஸ்வகந்தா என்ற பெயர்வர காரணம் சுறுசுறுப்பு, பலம் இரண்டிற்கும் பெயர்பெற்றது குதிரை.. அஸ்வ என்றால் குதிரை... இம்மருந்தை உண்டால் குதிரைக்கு இணையான பலம் பெறலாம் என்றொரு குறிப்பு உள்ளது.


ஆராய்ட்சி ரீதியாக பார்ப்போம்...


அஸ்வகந்தா பற்றிய ஆராய்ட்சி கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அதன் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியப்படும் வகையில் வந்துள்ளது.


Isopelletierine, Anaterine, Cuseohygrine, Anahygrine, withanolides, withaferins, Saponils ஆகிய வேதிப்பொருட்கள் அஸ்வகந்தாவில் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக sitoindosides, Acylserylglucosides (மனஅழுத்தத்தை குறைக்கும் வேதிபொருள்கள்) இருப்பதையும் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டது.



ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா ரசாயனம் மருத்துவத்தில் முதலிடம் பிடித்துள்ளதின் பேரில் அதன் மீதான ஆராய்ச்சிகள் முதலில் வயதுமுதிர்வை தடுக்க, நரம்பு தளர்ச்சி சரிசெய்ய, மனஅழுத்தத்திற்கு என மூன்று பிரிவுகளில் முறையாக மக்களிடம் கொடுத்து கண்காணிக்கபட்டது...


விளைவாக கிடைத்த ஆபாரமான சாதகமுடிவுகள் மேலும் ஆராய்ச்சியாளர்களை வியப்பூட்ட இன்னும் ஆர்வமாக பல கோணங்களில் மக்களுக்கு கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி வலுவுற்றது... இந்த முறை குழந்தைகளுக்கான மூளை திறன், பெண்களுக்கான கருப்பை கோளாறுகள், புற்றுநோய், கிருமிதொற்று, விஷமுறிவு என பல பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சிறிதும் தோல்வியின்றி நூறு சதவீத வெற்றியில் முடிவுற்றது.



வியக்கத்தக்க இம்மருந்தை சரியாக தேர்வுசெய்து ஆயுர்வேதத்தில் பயன்படுத்திருக்கும் ஞானத்தை கட்டுரை வடிவில் வெளியீடு செய்தனர்.


மேலும் ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அஸ்வகந்தா எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு இருந்த வயிற்று புண், சருமநோய்கள், மலசிக்கல், தூக்கமின்மை, தைராய்டு பாதிப்புகள் போன்ற நாள்பட்ட நோய்களோடு, காய்ச்சல், வீக்கம், வயிற்றுப்போக்கு, முகப்பரு, குடல்புழு போன்றவைகளும் தாமாக குணமடைந்தன.


பெரும்பாலும் முதுவயதினரை தாக்கும் எலும்பு, மூட்டு தேய்வுகளும், parkinson's, Huntington's, Alzeimer's ( மூளை செல்கள், நரம்புகள் சிதைவால் உண்டாகும் ஞாபக மறதி ) எனப்படும் நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைந்தது. சர்க்கரை வியாதி, இரத்தஅழுத்தமும் கட்டுக்குள் வரச்செய்தன.
சிறுநீரக தொற்று உட்பட கொரோனா போன்ற நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இம்மருந்திற்கு உண்டு.


அஸ்வகந்தா முதியோர்களுக்கு ஏற்ற மாத்திரை வடிவில், சூர்ண வடிவில், குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினருக்கு ஏற்ற டானிக் வடிவில், லேகியம் வடிவில் என பயன்படுத்த எளிய வகைகளில் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கிறது.

சுவைக்காக கார்பொரேட்களின் தேவையற்றவைகளை உண்பதை தவிர்த்து ஆரோக்கியம் தரும் பக்கவிளைவற்ற இந்திய மூலிகைகளை மருந்தாகவோ, உணவாகவோ உண்பதினால் கொரோனாவிற்கு மட்டுமல்ல எந்த நோய்க்கும் பயந்து ஒளியாமல் வாழலாம்.


குறிப்பு ..தலைப்பின் சாராம்சம் வேறு...
நிச்சயமாக அரசு சொல்கிற சமூக இடைவேளையை பின்பற்றிட நிச்சயம் வேண்டும்..கொரோனாவுக்கு அரசு சொல்கிற எந்த விதிமுறையையும் மீற சொல்லவில்லை..

பொதுநலன் கருதி வெளியிடுவோர்...

*AL SHIFA AYUSH HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727 7577
சென்னை 9043336000.

ஆயுர்வேத அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

0 comments:

கருத்துரையிடுக