திங்கள், ஏப்ரல் 18, 2011

குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்- Srungyaadhi choornam


குழந்தைகளின் நோய் போக்கும் -குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்- Srungyaadhi choornam
  (ref-சாரங்கதர சம்ஹிதா - மத்யமகண்ட)


தேவையான மருந்துகள்:
1.            கர்கடகசிருங்கி கற்கடச்ருங்கி         1 பாகம்

2.            அதிவிடயம் அதிவிஷா               பாகம்

3.            திப்பிலி பிப்பலீ                      1   பாகம்



செய்முறை:     

 இவைகளை நன்கு பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

1-2 கிராம் வரை தேனுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 

  
முக்கியமாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் (காஸ),  






காய்ச்சல் (ஜ்வர),  

வாந்தி (சர்தி).


குழந்தைகளின் முக்கியமாக -ஒரு வயது அல்லது மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகளின் பொதுவாக அடிக்கடி ஏற்படும் ,இருமல் ,காய்ச்சல் ,செரியாமை ,செரியா வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இது அற்புத மருந்து ..

ஆயுர்வேதத்தில் சிறு குழந்தைளின் நோய்களை இந்த ஒரு மருந்தை கொண்டே நீக்கி விட முடியும்  என்பது திண்ணம் ..

குறிப்பு -

அதி விடயம் என்ற அற்புத மருந்து -மிக மிக விலை உயர்ந்து ..அதாவது ஒரு கிலோ குறைந்த பட்சம் நாலாயிரத்தை தாண்டும் ,கலப்பட வாதிகள் இதற்க்கு பதில் நாபி கிழங்கை தந்து ஏமாற்றிவிடவும் வாய்ப்பு அதிகம் எனவே -எச்சரிக்கை தேவை ..என்னிடம் உள்ள அதி விடய கிழங்கின் படங்களை வருகிற பதிவில் காலம் கருதி வெளிவிடுகிறேன் ..

விலை உச்சத்தின் காரணமாக -கிலோ வெறும் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் கோரை கிழங்கை -சேர்க்கும் பல கம்பெனிகளை எனக்கு தெரியும் (இப்படி சேர்த்தால் மருந்து எப்படி வேலை செய்யும்).

அதிவிடயம் பல மருந்துகளில் ,மகா ராச்னாதி கசாயம் ,இன்னும் பல பல மருந்துகளில் முக்கியமான பொருளாக சேர்வதுண்டு
.

அதிவிடயத்தை -நீர்வாதத்திர்க்கு -ஆம வாதம் ,வாத ரக்தம் -போன்றவற்றிற்கு நாங்கள் விலை கருதாது பயன்படுத்துவததுண்டு .

 

Post Comment

3 comments:

வானவன் யோகி சொன்னது…

மீண்டும் மீண்டும் பாராட்டும் நிலைக்கே எங்களை வைத்திருப்பது ஆச்சரியமானது.......

அதாவது கலப்பட வியாபாரிகள் எப்படி நம் பாரம்பரிய மருந்தையும் அதன் தரத்தையும் குறைத்து மருந்தாக ஆக்கி சந்தைப் படுத்துவதில் சளைக்காமல் உள்ளனர் எனபதைக் காட்டியுள்ளீர்கள்..

அதே நிலையில் தான் மருந்துத் தொழிற்கூடங்களும்>>>...

குழந்தைகளை வளர்த்திய அந்தப் பாட்டி வைத்தியம்
செய்ததை குழந்தைகள் சிறப்பு நிபுணர்களும் கூட குணமளிக்க முடியாத சான்றுகள் ஏராளம்,,,......

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடியுள்ளீர் எங்கள் மனத்தினுள்ளே...

வாழ்க...வெல்க.....

sakthi சொன்னது…

மிக அருமை நண்பரே ,
தொடருங்கள் வாழ்த்திக்கொண்டே தொடர்கிறோம் உலகம் சார்பாக
நட்புடன் ,
கோவை சக்தி

Siddharthan சொன்னது…

அதி விடயம், எனக்கு தேவைப்படுகிறது, விலை குடுத்து வாங்க தயாராக உள்ளேன்... சிறிது வழிகாட்ட இயலுமா?

கருத்துரையிடுக