சனி, ஏப்ரல் 29, 2017

காலதாமதமான இரவு உணவின் பயமுறுத்தும் மோசமான விளைவுகள் .

காலதாமதமான இரவு உணவின் பயமுறுத்தும் மோசமான விளைவுகள் .

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். வர்தினி .,BHMS.,


வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கே என்கிற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வெகு வேகமாக பரவி வருகின்றது. இந்த வாழ்க்கை நம்முடையது தான் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பெரியவர்களின் பேச்சை தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் சிறிதளவும் கேட்பதில்லை. அதிலும் உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கும் உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம்.

நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதை பற்றிய பழங்கதைகளை கேள்விப்பட்டிருப்போம். அக்கதைகள் இரவு 8 மணிக்கு மேல் கட்டாயம் உணவு உட்கொள்ள கூடாது எனத் தெரிவிக்கின்றது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இரவு உணவை காலதாமதமாக உண்பதால் உயிர் இரத்த அழுத்தம், Hypertension ஏற்பட்டு இருதய நோய்க்கு முக்கிய காரணமாகும்.

பண்டைய காலத்தில் நமது மக்கள் சூரியன் உதிக்கும் முன் எழுந்து தன் கடைமைகளை செய்துவிட்டு சூரியன் மறையும் போது இரவு உணவையும் உண்டு உறங்க சென்று விடுவார்கள். இதனால் அவர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், இன்றோ நாம் இந்த இயந்திர வாழ்கையில் சூரியன் உதித்ததை கூட தெரியாமல் உறங்கிகொண்டு இருக்கிறோம். இதனால் அந்த நாள் முழுக்க நாம் புத்துணர்வின்றி (சோம்பேறித்தனமாக) பொழுதை கழிக்கின்றோம்.

சரி பகலில் தான் காலத்தை விரயம் செய்தார்கள் என்றால் இரவிலாவது சரியான நேரத்தில் உண்கிறார்களா.? அதுவும் இல்லை. இரவு மணி 10 அல்லது 11 ஆன பிறகு தான் இரவு உணவு என்று உள்ளதையே இங்கு பலருக்கு ஞாபகம் வருகிறது. இப்படி காலதாமதமாக உணவு உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை.

உடல் பருமன் :-

இரவு நேரம் கழித்து உண்டு அவசர அவசரமாக உறங்க செல்வதாலும் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் அதிகம். இது எதனால் என்றால் காலையில் நாம் உணவு உண்ட பின் மிகவும் சுறுசுறுப்பாக நமது வேலைகளை செய்கிறோம் இதனால் நமது உடலில் METABOLISM - அமிலம் விரைவாக சுரந்து ஜிரணமாவது எளிமையாகிறது. இரவில் அப்படி இல்லை காரணம் நாம் உண்ட பின் உடனே உறங்க சென்று விடுகிறோம் இதனால் ஜிரணமாவது தடைப்படுகிறது. இதனால் உடல் பருமனடைவது ஒரு காரணி ஆகிறது.



தூக்கமின்மை:-

உறக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இறைவன் குடுத்த வரமாகும். அந்த வரத்தை நாம் இரவில் தாமதமாக உணவை உண்டு இழந்து கொண்டு இருக்கிறோம். இரவு உணவு செரிமாணம் ஆக நேரம் அதிகமாக எடுப்பதால் உறக்கம் என்பது ஒரு கேள்வி குறியாக உள்ளது. இது மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டத உண்மையாகும் நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும். தூக்கமின்மையால் நமது அடுத்த நாளும் மோசமான மந்தமான நாளாகவே அமைகிறது.

Acid Reflux :-

இது நாம் சாப்பிட்ட உடன் உறங்குவதால் ஏற்படும் பிரச்சனையாகும். நாம் சாப்பிட்ட உடனே உறங்குவதால் நாம் உண்ட உணவில் உள்ள அமிலங்கள் உணவு குழாயில் மேல் நோக்கி செல்கிறது. இதனால் நெஞ்செறிச்சல் உண்டாகிறது.

Irritable Bowel Sybdrome (குடல் நோய்) :-

உணவு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிலர் உணவின் அளவை குறைத்தால் உடல் பருமன் குறையும் என உணவை தவிர்கிறார்கள் இது மிகவும் பல பிரச்னைகளுக்கு வலி வகுக்கக்கூடியதாகும்.
கண்ட நேரங்களில் உணவை உண்பதால் குடல் நோய் வர காரணமாகும். வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவீக்கம், வயிறு சமந்தமான உபாதைகள், வயிற்று எரிச்சல் இவை அனைத்தும் குடல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

மனஅழுத்தம் :-

உணவை அடிக்கடி தவிர்ப்பதால் மன அழுத்தம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மன அழுத்ததிற்கு முக்கிய காரணம் உடல் மற்றும் மனம். உடல் அதன் வேலையை சரியாக செய்யாத பொது மனஅழுத்தம் உண்டாக வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்க சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான உணவு என்பது காலை உணவை அரக்கனை போலவும், மதிய உணவு அரசனை போலவும், இரவு உணவு யாசகனை போலவும் உண்ண வேண்டும். குறிப்பாக இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே உண்பது சாலச்சிறந்ததாகும்.

ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்வாகும்.
ஆரோக்யமான வாழ்வை வாழ ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
ராஜபாளையம் 90 4333 6888
திருநெல்வேலி 90 4222 5999
சென்னை -    90 4333 6000

Post Comment

1 comments:

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.. இதை மேலும் அதிகமானவர்கள் தெரிந்துகொள்ள thiratti.in முயற்சி செய்து பாருங்கள்.. உங்களுக்கு நன்றி

கருத்துரையிடுக