வியாழன், ஜனவரி 13, 2011

இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்-Lohasavam


இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்-Lohasavam
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல  - 25.600 லிட்டர்
2.            வெல்லம் குட                         - 5.000 கிலோகிராம்
3.            தேன் மது                            - 3.200 கிலோகிராம்

இவைகளை நன்கு கலந்து அக்கலவையில்


1.            இரும்பு அரப்பொடி (சுத்தி செய்தது) லோஹசூர்ண  - 200 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                     - 200    “
3.            மிளகு மரீச்ச                                   - 200    “
4.            திப்பிலி பிப்பலீ                                  -  200              “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ             - 200    “
6.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ           - 200    “
7.            நெல்லிமுள்ளி ஆமலகீ                          - 200    “
8.            ஓமம் அஜமோதா                               - 200    “
9.            வாயுவிடங்கம் விடங்க                         - 200    “
10.          கொடிவேலி வேர் சித்ரக                         - 200    “
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                        - 200    “


ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் கலந்து காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 1.000 கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   
  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 நாட்பட்ட காய்ச்சல்கள் (புராண ஜ்வர), சீரணக் கோளாறுகள் (அக்னி விகார), வயிற்றுப் போக்கு (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சோகை (பாண்டு), குன்மம் (குல்ம), மூலம் (அர்ஷ), கல்லீரல், மண்ணீரல் வீக்கம், நோய்கள் (யக்ரித் ப்லீக வ்ருத்தி, ரோக), பெருவயிறு (மஹாதரம் (அ) ஸ்வயது (அ) ஜத்தர) 


                சோகை, காமாலையில் (பாண்டு, காமால) புனர்னவாஸவத்துடன், பெரு வயிற்றில் (மகோதரம்) கோக்ஷூராதி சூர்ணத்துடனும், வயிற்றுப்போக்கு சீத பேதியில் கற்பூராரிஷ்டம் மற்றும் பப்பூலாரிஷ்டத்துடனும், இருமல் (காஸ), இரைப்பிருமலில் (ஸ்வாஸகாஸ) வாஸாரிஷ்டம், கனகாஸவத்துடனும் இம்மருந்து கலந்துதரப்படுகிறது.
            

Post Comment

2 comments:

Sathik Ali சொன்னது…

all articles are very Nice and useful. You are Doing a grea....t job.thanks a lot

Sathik Ali சொன்னது…

I have added a link to your site in my blog site.can I?
http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_9970.html

கருத்துரையிடுக