செவ்வாய், ஜனவரி 18, 2011

அடிக்கடி மலம் கழிதலை பசியை தூண்டி சரி செய்யும் -முஸ்தாரிஷ்டம்-Mushtarishtam


அடிக்கடி மலம் கழிதலை பசியை தூண்டி சரி செய்யும் -முஸ்தாரிஷ்டம்-Mushtarishtam
(ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்யாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கோரைக்கிழங்க முஸ்தா        - 10.000 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                   - 51.200 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 15.000 கிலோ கிராம் சேர்த்து அதில்

1.            ஓமம் அஜமோதா               - 100 கிராம்
2.            சுக்கு சுந்தீ                     - 100    “
3.            மிளகு மரீச்ச                   - 100    “
4.            இலவங்கம் லவங்க             - 100    “
5.            வெந்தயம் மேதிக              - 100    “
6.            கொடிவேலி வேர் சித்ரக         - 100    “
7.            ஜீரகம் ஜீரக                    - 100    “ 

ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


 தீரும் நோய்கள்: 

 செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னி மாந்த்ய), வாந்திபேதி எனப்படும் cholera (விஷூ ஸிகா), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), வயிற்றுப் போக்கு (அதிஸார), சீதபேதி (ப்ரவாஹிகா).

Post Comment

0 comments:

கருத்துரையிடுக