புதன், ஜனவரி 19, 2011

காய்ச்சலை போக்கும் சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம்-pancha thikata arishtam


காய்ச்சலை போக்கும் -சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம்-pancha thikata arishtam

தேவையான மருந்துகளும் செய்முறையும் :

1.            நிலவேம்பு பூநிம்ப                    - 0.625 கிலோகிராம்
2.            கடுக ரோஹிணி கடுகீ                - 0.625                 “
3.            கோரைக்கிழங்கு முஸ்தா             - 0.625                 “
4.            பர்பாடகம் பர்பாடக                   - 0.625                 “
5.            சீந்தல்பொடி குடூசி                   - 0.625                 “
6.            தண்ணீர் ஜல                      - 51.200 லிட்டர்


இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 5.000 கிலோகிராம் சேர்த்துக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 750 கிராம் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.



 தீரும் நோய்கள்: காய்ச்சல்கள் (ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல்களும் முறைக் காய்ச்சல்களும் (சதுர்த்திகா ஜ்வர, விஷமஜ்வர), நாட்பட்ட தோல்நோய்கள் (புராண சர்மரோக), வயிற்றுப் பூச்சிகள் (க்ருமி), பசியின்மை (அக்னிமாந்த்ய)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக