திங்கள், டிசம்பர் 02, 2013

ஸோரா- சிபிலிஸ்-சைக்கோஸிஸ்-ஹோமியோவின் அடிப்படை தத்துவம்

1       ஸோரா மருந்துகள் :- ஸோரா சர்மத்தை ஒட்டி வரும் உபாதைகள், நடுத்தர உடல்வாகு உடையவர்கள்.
ஸல்பர், ஸோரினம், ஆர்ஸனிகம், ஆர்ஸ் ஐயோட், லைக்கோ, லாக்கஜீஸ், ஹீபர், ஐயோடி, நேட்மூர், சிலிகா, செபியா, டியூபர்குலினம்.


சோராவின் குணம்:

பலவகையான வலிகள், உறுப்புகள் அழுகுதல், புத்தி பேதலித்தல், மற்ற விஷயங்களுக்கும் இதுவே தாய். (ரியாக்ஷன்)வியாதிக்கு பின்பு மறுகுறி பாய்தல் அதன் பின்பு கள்ள சதை அதாவது முண்டு முடிச்சிகள் சருமத்தில் தோன்றுதல்? பஞ்சேந்திரியங்களின் உதவியோடு இதை உணர முடியாது.அது தான் சோரா என்பதாகும். இதுதான் மாற்றி மாயை செய்கிறது.மனதை குளறுபடி செய்வது இதுவே பின்பு உடல், உறுப்பை தாக்கி விடும் மற்றும் பலவகையான மன திருப்தியின்மையும் சோராவே, சரும அரிப்பும் சோராவே.Lation Psora (மறைந்திருந்து தாக்கும் சோரா.
குறிப்பு:-
இன்றைய ஆங்கில மருத்துவ கருவிகளில் சோதனை செய்து பார்த்து விட்டு ஏதும் நோய் இல்லை என்று கூறுகிறார்களே (கருவிகளுக்கு எப்போதும் தெரியாது) அது தான் சோரா. இது அவர் அவர் செய்த பாவத்தின் பின்பு பெற்ற சாபமே தான். பெற்றோர், முன்னோர்கள் செய்த பாவமும் கருமையத்தில் பதிந்து வெளியேறி உடலை தாக்குகிறது. உடலை மட்டும் பார்த்தால் தெரியாது அல்லவா? கருமையத்தையும் தூய்மை செய்ய வேண்டும். இந்த கருமையத்தைதான் ஹோமியோபதி பார்க்கிறது.

இன்று காணப்படும் சர்க்கரை வியாதி-சோரா தான்:

சாம்பல் சாப்பிட ஆசைப்படுவது சோராவே, கற்பனையாக தெரிவதெல்லாம் சோராவின் விசமே, விருப்பமும், வெறுப்பும் சோராவே பெண்ணை விரும்புதல் சோரா, வழுக்கை, தலையில் அரிப்பு, நரை விழுதல், கண் எரிச்சல், காது இரைச்சல், மூக்கினுள் கொண கொணப்பு, எதையும் தாங்க முடியாத மனம், பலசுவை வாயில் தெரிதல் (அ) சாப்பிடும் பொருள் சுவை மாறி தெரிதல், காய்ச்சல் விடும் போது வாய் கசப்பு சோரா, வயிறு நிரம்பாத மனம், தீனி தின்பது, சித்திரவதை செய்யும் இரும்பல், நுரையீரல் தொல்லை, ஆஸதுமா, இதயத்தில் பலவகை சப்தம் ஏற்படுதல் சோராவே. இது மன அதிருப்தியின் பயனால் ஏற்படுகிறது நல்ல உருவத்தை விகாரப்படுத்துவம் சோராவே கல்லீரலையும் மற்ற உள் உறுப்புகளை கெட்டிபடுத்துவதும், வீங்க வைப்பதும் சேராவே, புற்று நோயுக்கு பெரும்பங்கு வகிப்பது சோரவே, வேகமாக பேசுவான், எழுதுவான், பலவகையான பயம், உடலில் தோன்றும் பக்கவாதம், எரிச்சல், குளிர்ச்சி, பேதி மலச்சிக்கல் சோராவே, பைத்தியம் சோரா, கள்ளச்சதை வளர்ச்சிக்கு உதவி செய்வதும் சோரா, சிபிலிஸ் உதவியின்றி வளரமுடியாது.எல்லா இடமும் பரவியிருப்பது சோராவே. நாள்பட்ட நோய்க்கு இதுவே தாய் என்று கூறப்படுகிறது.


2            சிபிலிஸ் மருந்துகள் :- குழிப்புண்கள், குண்டான உடல் அமைப்பு கொண்டவர்கள்.
கல்கார்ப், மெர்க், சிபிலினம், டியூபர்குலி, ஆரம்மெட், ஆரம்மூர், ஹீபர், ஆர்ஸனிகம், காலிபைக், காலிகார்ப், லைக்கோ, காலிஐயோட், லாக்கஜீஸ், நைட் ஆசிட், ஸ்டெபி ஸாக்ரியா.

சிபிலிஸ் :

கசகசா போல அமைப்பு உள்ள புண்கள் எங்கும் தோற்றுவிக்கும். அது அக்குள், ஆசனவாய், நிணநீர் கோளத்திலும், அதிகமாக ஆண், பெண் உறுப்பில் தாக்கும். மற்றும் தடித்த நாக்கும், வெள்ளைபடிவும், நாக்கில் பற்கள் பதிவு, சீழ் நாற்றமுள்ள வியர்வை, இரவு மு்ச்சு தொல்லை, படுக்கையின் சூட்டை கூட தாங்க முடியாது, தானாகவே சம்பாதித்து கொண்ட வியாதி, இது எந்த உறுப்பையும், (அதாவது எலும்பை, நரம்பை) எதை தொடுகிறதோ அதை கரைத்து அழித்து விடும், மூக்கு, கருப்பை, குடல் போன்ற உறுப்பில் புண், அல்சர், அழுகல், சொத்தை, குஷ்டம், மூக்கு நுனி, விரல், முட்டி முழங்கை பல் போன்ற பகுதிகளில் சொத்தை விழுவதும் ஆகும். இதற்கு இப்போது மேலே களிம்பு பூசி விடுவதால் சிபிலிஸின் வளர்ச்சியும் பயணம் நிற்காது. சிபிலிஸ தன்னை புண்ணாக வெளிப்படுத்துகிறது. இதை வெளிப்பூச்சு களிம்புகளினால் குணம் செய்வதுடன் இது இரண்டாம் கெட்ட நிலைமையாகி விடுகிறது. அது புண்ணுடன் தடிப்பும், கழலையும் உடன் சேர்ந்து கொள்ளும். இது திடீர் வகையில் இது தற்போது தோன்றியது அல்ல இவ்விடமூம் நாட்பட்ட விசமே. ஆங்கில மருந்துகளினால் எத்தனை தடைவை குணம் செய்து அடக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த கணக்கு தெரிந்தவர் தான் ஹோமியோபதி மருத்துவர். செகன்டரி சிபிலிஸ் என்பது ஏதோ ஒரு பகுதியில் மாற்றம் அடைகிறது என்பதை உணர்ந்த கொள்ளவும். இவர் மனதில் ஆழமாக எதுவும் பதியாத மந்த புத்தி, முட்டாள் போலவும் இருப்பார். படுக்கையில் கஷ்டம் தற்கொலை எண்ணம், எல்லாமே எதுவும் சுமையாகஇருப்பது போல எண்ணம், கழிவு அதிகம் அதாவது மலம், சிறுநீர், சீல், வாந்தி போன்றவைகள். ஓய்வு பொழுதில் தணிவும், குளிர்ச்சியில் தணிவும், சீழ் நாற்றம் வீசும் வியர்வை, கண்நோய் எல்லா வகையும் சிபிலிஸ் தான். வியாதியை குணப்படுத்த முடியாததும் இந்த சிபிலிஸ் தான். இதை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயே குழம்பிப்போவதும் சிபிலிஸ், சோராவின் பின் பலம் இதற்கு எவ்வளவு என்று பார்த்து கணிக்க வேண்டும். கடுமையான சிந்தனை செய்தால் அது சோராவாக வெளிவரும். பிறகு அதன் மீது சிபிலிஸ், சைகோஸிஸ் ஒட்டிக்கொள்ளும். இதில் எது முதலில் ஒட்டும் என்று சொல்ல முடியாது. ஆப்ரேசனை குழப்பி விடுவது இதுவே. மூன்று விசமும் சேர்ந்தால் சிக்கல்கள் அவர்களுக்கு மூட்டை மூட்டையாக கூட இருக்கலாம். ஒரு மூட்டை சிக்கல் தீர்ந்த உடன் மற்றொரு மூட்டை, மூட்டையாக சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கும். அப்படி வரும்போதுதான் அதை அளந்து உரிய மருந்து தர வேண்டும். அது அனுபவத்தின் வாயிலாக அறிவீர்கள். (நூல்கள் பல கற்பினும் உண்மை அனுபவ அறிவே அறிவு என்று திருக்குறள் சொல்லுகிறது.) ஒரு மருத்துவர் ஆவதற்கு நூல் அறிவை விட அனுபவ அறிவுதான் முக்கியம். எலும்பு நோய், நரம்பு நோய், பேதி, காய்ச்சல், காச நோய் போன்ற நோய்களில் இருக்கும் நோயை பார்க்காமல், அதனுள் இருக்கும் விஷேசமான குறி (அடையாளம்) அல்லது தனித்தன்மையை தான் கவனிக்க வேண்டும். அதுதான் ஹோமியோபதியில் தேர்வு செய்யப்படுவதாகும். சந்தர்ப்ப சூழ்நிலையின் தேர்வும், பொட்டன்சியும் அறிய வேண்டும். காரணத்தையும் மருந்து வீரியத்தையும் மருத்துவர்தான் அனுபவத்தில் கண்டுபிடித்து கொள்ள வேண்டும். இதன் விளக்கத்தை டாக்டர் சாமுவேல் ஹானிமேன் எழுதிய கிரானிக் டிஸிஸ் என்ற நூலில் அதை பார்த்து, படித்து தெரிந்து தெளிந்து கொள்ளவும்.



3            சைக்கோஸிஸ் மருந்துகள் :- வெளியில் துருத்தும். நெட்டை, குட்டை உடல் வாகு உடையவர்கள்.


தூஜா, ஆர்ஸனிகம், ஆர்ஸனி ஐயோட், மெஸரியம், பாஸ்பரஸ், நேட்மூர், ஸோரினம், பைரோஜினம், செபியா, சிலிகா, லைக்கோ, டியூபர்குலி.


சைகோஸிஸ்:

மனதில் கிரகித்து பிறகு தேகத்தில் காட்டும். இவர் மனம் பெரிய திட்டம் போடுதல், வேகம், இரகசியம் காப்பார்,தைரியசாலி, யாரையும் நம்பமாட்டார், கொலைகாரர், திருடர், பயங்கரமான மிருக புத்தி, வெட்கமில்லாதவர், எந்த நிலையிலும் பதவியிலும் இப்படி இருப்பார். நோயுற்ற உறுப்பு நிறமாற்றத்துடனும், முட்டைகோஸ் போலவும், வறண்ட வளர்ச்சியும், நாற்றமுள்ள நீர் வெளியேறும், தொள தொளப்பு சதை, ஆசனம், யோனி மானியில் கள்ள சதை வளர்ச்சி இதுவே இதன் முக்கிய குறி. இடி, புயல் மழைக்கு முன்பு எரிச்சல் அடைவார். அடிக்கடி சிறுநீர் கழிப்பார். மழை வரும் முன்பு சிறுநீர் தொல்லையும் முன்பே அதை அறிவிக்கும் கருவி எனலாம். கத்தி பேசுவான், மெதுவாக பேசுவான், மானித்தோலும், கொட்டையிலும் வீக்கங்கள், வலிகள் கருப்பை கட்டிகள், வலிகள், தொல்லைகள், இரத்தம் வடிதல் சிறுநீரகத்திலும் பல் முளைக்கும் போதும் தொல்லைகள் தலையில் மட்டும் புளிப்பு நாற்றம், குழந்தைக்கு ஏற்படும் முண்டு முடிச்சி எல்லா வகை கள்ளச்சதை வளர்ச்சிகள் சைகோஸிஸ்தான்.                                                                                                                                                                     

நோயின் உருவை உணரும் வழி :-

 ஒவ்வொரு நோயிலும் நோயாளியின் உடலிலும் மனதிலும் மாறுதல்கள் தோன்றுகின்றன. ஐம்புலன்களின் துணை கொண்டு வெளிப்படையாக அறியக்கூடிய இம்மாறுதல்களைத் தவிர வேறு எதையும் வைத்தியர் கவனிக்க வேண்டியதில்லை. முன்பிருந்த நோயற்ற நிலைக்கும் இப்பொழுது உள்ள நோயுற்ற நிலைக்கும் உள்ளமாறுதல்களைத்தான் வைத்தியர் கவனிக்க வேண்டும். இம்மாறுதல்களின் விவரங்களை நோயாளி, அவர் அருகில் இருப்போர் ஆகியோரின் வாக்கு மூலம் வைத்தியரின் கண்ணோட்டத்தின் மூலமும் அறியலாம். வெளிப்படையாகத் தெரியும், இக்குறிகள் எல்லாம் நோயின் முழு வடிவத்தை அதாவது உண்மையான உருவத்தை நமக்கு காட்டுகின்றன.


உதாரணமாக காந்தல், எரிவு அதனுடைய தன்மை.


            ஒருவருடைய ஆட்காட்டி விரலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் அதனுடைய காந்தல் எரிவு காது வரை இருக்கும். அடுத்து சுன்ணாம்பினால் ஆட்காட்டி விரல் வெந்துபோனால் அதன் ஆட்காட்டி விரலில் ஏதாவது ஒரு ஆசிட் பட்டுவிட்டால் அந்த கரத்தில் எரிவு அந்த விரலில் மட்டுமே இருக்கும். ஆனால் அதே விரலில் அரைத்த மிளகாய் பட்டு விட்டால் உடல் முழுவதும் காந்தலும் எரிவும் பரவும். இப்படியாகத் தன்மையை ஆராய்ந்து உரிய மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் பூரண குணம் கிடைக்கும்.


Post Comment

1 comments:

sakthi சொன்னது…

போக்கிஷங்களின் வரிசை ,அருமை

கருத்துரையிடுக