செவ்வாய், மார்ச் 30, 2010

விஷ்ணு கிராந்தி -விஷ்ணு கிரந்தி







  • சங்க  புஸ்பியின் வேறு வகையாக இது கருதப்படுகிறது 
  • ஆயுர்வேதத்திலும் இந்த மூலிகை விஷ்ணு கிரந்தை என்றே அழைக்கபடுகறது.
  • வந்த்யா எனப்படும் குழந்தையின்மைக்கான சிகிச்சையில் விஷ்ணு க்ராந்தை மிக பெரிய அளவில் உதவுகிறது  
சித்த மருத்துவத்தில் 
  • செய்கை -வியர்வை பெருக்கி,உரமாக்கி,உடல் தேற்றி ,வெப்பகற்றி,புழுகொல்லி,தாபமஅகற்றி ,கோழை அகற்றி .
  • விஷ்ணு கிரந்திக்கு கொடிய சுரத்தால் பிறந்த பயம் ,உட்சூடு ,கோழை,இருமல் ,வாதத்தால் பிறந்த பிணிகள் நீங்கும் 
செய்யமா லின்கிரந்தி தீராத வல்லரசுத் 
தைய மறுக்கும் அனல்தணிக்கும்-வெய்ய கப 
காச இருமலியுங் கட்டறுக்கும் வாதத்தால் 
ஊசலா டும்பிணிபோக்கும் (அகத்தியர் குணபாடம்)
  • குடிநீரிட்டு விஷ்ணு கிரந்தியை சாப்பிட மேல் கண்ட நோய்கள் போகும் 
மாலாகச் சூர்ண மழையுட னுண்டிடச்
சூலக மாதர்க்குச் சூட்சிய தாக்குமே (தேரையர் ..)
  • விஷ்ணு கிரந்தியை பொடி செய்து இளம் வெந்நீருடன் சேர்த்து குடித்துவர பிள்ளை பேறு உண்டாகும் 
  • இதனை சீரகத்துடன் சேர்த்து அரைத்து பாலில் கலக்கி உட்கொள்ள நரம்பு தளர்ச்சி மாறும்,சுரம் நீங்கும் 
  • இதனை துளசியுடன் குடிநீராக்கி குடிக்க செரியாமை ,கழிச்சல் மாறும் 
  • இதனை ஓரிதழ் தாமரையுடன் சேர்த்து சாப்பிட குழந்தை பேறு -மலடு நீங்கி பிறக்கும் 
  • இதனை கண்டங்கத்தரி வேருடன் சாப்பிட கரு முட்டை வளர்ச்சி உண்டாகும் 
  • இதனை வீழி நெய்யுடன் மாத விலக்கின் போது மூன்று நாட்கள் சாப்பிட கருக்குழாய் அடைப்பு நீங்கும் 



























குணமாகும் நோய்கள்- கிருமி, புண்கள், உடல் இளைப்பு நீக்கும், தலைமுடிக்கு நல்லது

http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-4-high-resolution-herbal-pictures.html

Post Comment

4 comments:

இருமேனிமுபாரக் சொன்னது…

மிகவும் அருமை. மற்ற மருந்துகள் பற்றிய விளக்கங்கள் மிக மிக சுருக்கமாகவே இருக்கின்றது.உதாரணமாக இஞ்சி. மக்கள் அறிய வேண்டும் என்ற எண்ணம் வந்தபின் அதை முழுமையா கொடுத்து விட்டீர்கள் என்றால் வெகு தூரத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் பயன் பெற ஏதுவாகும் என்பது என் பணிவான வேண்டுகோள். தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

curesure Mohamad சொன்னது…

நண்பரே -காலம் ஒத்துழைக்கும் போது அனைத்தையும் மிக விரிவாக விரைவாக எழுதுவேன் ..

G.MUNUSWAMY சொன்னது…

nanbare,
en magalukku ettu varudangala kulandai illai, idhai padithavudan oru nappsai, idhai vangi kodhu parkalame enru aanal idhu (vishnugranthi)chennaiil engu kidaikkum evvaru adhai solli vanguvadhu enra vibarangalai enakku thani e-mailil padhil alikkumbadi kettukolgiren.
Nandri,
G.Munuswamy,
gmunu_2008@rediffmail.com

curesure Mohamad சொன்னது…

நண்பரே -நீங்கள்என்னை 9688778640 வில் தொடர்பு கொள்ளுங்கள் -ஆலோசனை தருகிறேன்.

கருத்துரையிடுக