வெள்ளி, மார்ச் 26, 2010

ஊமத்தை-ததூர

ஆயுர்வேதத்தில் ஊமத்தையை -உன்மத்த ,கனகம்,ததூர என்று சொல்வோம் 
  • ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .
  • ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் .
  • ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .
  • பயன்பாடுகளில் -ஜ்வரம்,தோல் நோய்கள் ,புண் ,அரிப்பு ,கிருமி ,விஷ ரோகம் ,நீர் கடுப்பு 
  • வியாதி சிகிச்சையில் -
  • நாய் கடிகளில்(அலர்க்க விஷம் ) -ஊமத்தை ,வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும் (சுசுருத சம்ஹிதை -சூத்ர ஸ்தானம்-காண்டம் -௭)
  • கிருமி -ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன்,ஈறு தொல்லை நீங்கும் ( வ்ருத்த மாதவம் )
  • பிடக ஆமாய -வேனல் கட்டிகளில் -வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு ,கட்டிகளை கரைக்க வெளிப்ர்யோகமாக உதவும் (சக்ர தத்தா )
  • மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -கனகாசவம் ,சூத சேகர ரசம் ,மகா விஷ கர்ப்ப தைலம் ,உன்மத்த ரசம் 
  • ஆஸ்தமா குணமாக -கனகாசவம் உதவும் 
  • அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்.-தற்கொலைக்கு  விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றி யுள்ளது எனவே -ஆயுர்வேத சித்தா மருந்துகில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது .
  • அட்ரோபின் கண்ணின் விழிபாவையை விரிக்க உதவும் .இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது 
  • ரயில் பயணிகளில் மயக்க பிஸ்கெட்டை கொடுத்து அபேஸ் பண்ணுபவர்களின் மயக்க பிஸ்கேட்டில் ஊமத்தை விதை உள்ளதாக சொல்கிறார்கள் .
சித்த மருத்துவத்தில் 

செய்கை -வாந்தியுண்டாக்கி ,இசிவகற்றி ,துயரடக்கி,மூர்சையுண்டாகி 
குணம் -நாய்கடி புண் ,குழி புண் ,கட்டிகள் ,நஞ்சு ஆகியவை தீரும் 

நாய்கடியால் வந்து நலிசெய் விரணமும்போம் 
வாய்க்குழி புண் கட்டிகளும் மாறுங் காண்-தீக்குணதைச்
சேமத்தில் வைத்தி லிடத் தீருமுத்தோ டங்ககளரும்
ஊமத்தை யின் குணத்தை யுன்னு (அகத்தியர் குண பாடம் )



  1. இலை : இலையை நல்லெண்ணெயில் வதக்கி, இதமான சூட்டில் ஒத்தடமாகக் கொடுத்து, கட்டி வந்தால் வாதவலி, மூட்டுவலி, வாயுக்கட்டிகள், அகண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மார்பகங்களில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.
  2. இலையைக் காயவைத்து பொடியாக்கி குண்டுமணி அளவு தேனில் கொடுத்தால் சுவாசகாசம் குணமாகும்.
  3.  இலை, பூ, விதை, மூன்றையும் சம அளவாக எடுத்து பாலாவியில், பிட்டவியலாக்கி அவித்து உலரவைத்து, ஒன்றிரண்டாக இடித்து அதில் சிறிது அளவு ஒரு இலையில் வைத்து சுருட்டாக்கி புகைத்தால் மூச்சுத் திணல் குணமாகும். இலையுடன், சம அளவு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து களிபோலக் கிளறி, இதமான சூட்டில் பற்று போல போட்டு வந்தால், மூட்டு வீக்கம், வலியுள்ள கட்டிகள், வெளிமூலம் போன்றவை குணமாகும்.
  4. இலைச்சாற்றை 2, 3 துளி அளவு வெல்லத்தில் கடைந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுத்து பத்தியமாக இருந்து வந்தால் வெறி நாய்க்கடி விஷம் தீரும். உப்பு, புளியை நீக்கி, பால், மோர், சோறு மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி புண்ணில் கட்டினால் புண் ஆறும்.
  5. இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காயெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி ஒரு சில துளிகளைக் காதுகளில் விட்டு வந்தால் ஏற்படும் காதுவலி குணமாகும்.
  6. இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காய் எண்ணெயும் கலந்து பதமாகக் காய்ச்சிய பிறகு, சிறிதளவு மயில் துத்தம் தூளாக்கி போட்டு வடிகட்டிய பின் மேலாக பூசி வந்தால்  புரையோடிய புண், சதை வளரும் புண், ஆறாதபுண் எனும் புண் பிளவையும் கூட குணமாக்கும்.
  7. காய் : வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.
  8. பிஞ்சு : இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.
  9. விதை : இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.
  10.  50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.
  11. வேர் : விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது

மேலும் இன்னுமொரு லிங்க் 
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/oomathai-ayurvedic-herbs.html
குணமாகும் நோய்கள் -மூச்சு திணறல் ,வயிற்று வலி,வீக்கம் போகும் 



Post Comment

3 comments:

பனித்துளி சங்கர் சொன்னது…

பயனுள்ள தகவல்கள்!!
தேடித்தந்தமைக்கு நன்றி!!!

வாழ்த்துக்கள்!!

ATOMYOGI சொன்னது…

***ரயில் பயணிகளில் மயக்க பிஸ்கெட்டை கொடுத்து அபேஸ் பண்ணுபவர்களின் மயக்க பிஸ்கேட்டில் ஊமத்தை விதை உள்ளதாக சொல்கிறார்கள் .***

ஆஹா!!!! டிப்ஸ்க்கு நன்றி.

மச்சவல்லவன் சொன்னது…

பயனுள்ள தகவல்கள் இன்றுதான் பார்க்கமுடிந்தது.நன்றி வாழ்த்துகள்.

கருத்துரையிடுக