ஞாயிறு, ஜனவரி 10, 2010

கண்ட மாலை & நாடி விரணம் ரோகம் - ரோக நிதானம்

கண்டாமலை

திரிதோஷங்கள் மேதோதாதுவை அனுசரிப்பதினாலும்,
மாமிசதாது விருத்தியினாலும், கழுத்தின் நரம்புகளிலும், அக்குள் களிலும், அரைகளிலும் தேகநிறத்தைப் பெற்று கெட்டிப்பட்டு மினுமினுத்து நெல்லிக்காய், சிறுகத்திக்காய், பிரமானத்தை ஒத்து சிறிதும் பெரிதுமான கட்டிகள் உண்டாகும். அவைகள் நாட்சென்று பழுத்து உடைந்து நடுவில் குழிவிழுந்து பலபேதங்களாயிருக்கும். இவற்றுள் சிலது அற்ப நோயுடன் உடைந்து சீழைச்சொறிவதும், சிலது நமைச்சலுடன் உஷ்ணத்தைத் தருவதும், சிலது கிளைத்துக்கொண்டே யிருப்பதும், சிலது நெடுநாள்
சென்றும் கரையாது வலுப்பதுமாக யிருக்கும். இந்த ரோகம்
கண்டத்தைச்சுற்றிலும் மாலைப்போல் பிறப்பதால் கண்டமாலை எனப்பெயர்பெற்றது. இதுவே தொடை கவுட்டில் கண்டால் அதனை அரையாப்புக் கட்டி என்பர்.

எந்த கண்டமாலைக் கட்டியாவது அறுகன்வேரைப்போல்
கிளைப்பதும் அடங்குவதுமாயிருந்து இதனால் சுரம், இருமல், வாந்தி, பீனிசம், பக்கநோய், தேகசுட்சம் என்னும் இக்குணங்கள் உண்டாகில் அசாத்தியம். இக்குணங்கள் இல்லாவிடில் சாத்தியம்.
 



நாடி விரணம் 

நரம்புகளில் பிறக்கின்ற கட்டியானது பழுத்து உடைந்து விஷமித்தால் அந்த நரம்பைப்பற்றி, மாமிசதாதுமுதல் அஸ்திதாது வரையிலும் சிலையோடும். அது ஒரு நரம்பைப்பற்றினாலும் அதற்கு சகல நரம்புகளும் சம்மந்தப்பட்டு வலைப்பின்னல் போல் யிருப்ப
தால் சிலை ஒடுதற்கும் சீழ்கொள்ளுதற்கும் பலவழிகளுண்டு ஆதலால் இதை சிலையோட வொட்டாமல் வசப்படுத்தல் வேண்டும். இதுவே நாடிவிரணம். இதனால் நுரைத்த சலம்வடிதல், கருஞ்
சிவப்பு ரத்தம்வடிதல், அதிக நமைச்சல், மிகுந்த வேதனை என்னுங்குணங்களுண்டாம். இது வாதநாடிவிரணம், பித்தநாடிவிரணம், சிலேஷ்மநாடிவிரணம், திரிதோஷநாடிவிரணம், அஸ்திநாடி விரணம் என ஐந்து வகைப்படும்.

1. வாதநாடி விரணம் :- இது சூட்சும முகத்துடன் நிறபேத
மாகப் பிறந்து அதிக நோயைத் தரும். இக்கட்டியானது பழுத்து உடைந்தால், அதில் நுரைத்த சலம் வடிதலும் இரவில் கருஞ்சிவப்பு ரத்தம் ஒழுகுவதுமாக இருக்கும்.

2. பித்தநாடி விரணம் :- இது சுரம், தாகம், எரிச்சல் இவைகளை உண்டாக்கிக்கொண்டே பிறக்கும். இக்கட்டி பழுத்து உடைந்தால் மஞ்சள் நிறத்துடன் சுடுகையுள்ள துர்க்கந்த சீழும் ரத்தமும் பகற் காலத்தில் ஒழுகுவதாயிருக்கும்.

4. சிலேஷ்ம நாடி விரணம் :- இது தடித்து கெட்டிபட்டு
மினுமினுப்புடன் பிறக்கும். இக்கட்டி பழுத்து உடைந்தால் எந்நேரமும் சீழ் வடிவதாயிருந்தாலும் இரவு காலத்தில்மிதமில்லாமல் வடிந்தாலும். அதிக நமைச்சலும் உண்டாகும்.

5. திரிதோஷ நாடிவிரணம் :- இது வாத பித்த கிரணங்களுக்குள்ள குணங்களை யெல்லாம் உண்டாக்கும். இது அசாத்தியமாம்.

6. அஸ்தி நாடி விரணம் :- இது எலும்பின் மார்க்கத்தில்
பிறந்து அந்த எலும்பின் நரம்புகளுக்கு உபத்திரவத்தை தருவது மன்றி மிருதுவாய் இருக்கும். இக்கட்டி பழுத்து உடைந்தால் இதிலிருந்து அரைத்து சுடுகையுடன் ரத்தமும் சீழும் வடியும். இவ்விரணம் பிறந்த எலும்பை அறுத்து சிகிச்சை செய்யாவிடில் வசப்படாது. இதனை சல்லியநாடி விரணம் என்றும் கூறுவர்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக