வியாழன், ஜனவரி 14, 2010

கண்ட மாலை (தைராய்டு வீக்கம் ) சிகிச்சைகள்


கணடமாலை சிகிச்சை

கண்டமாலை கியாழம் :- கொள்ளு, மிளகு, பெருங்காயம், இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால் கண்டமாலை நிவர்த்தியாகும்.

முஸ்டீமூல லேபனம் :- சிவகரந்தை வேரை அதன் சாற்றினால் அரைத்து லேபனம் செய்தால் கண்டமாலை நிவர்த்தியாகும்.

சிவகரந்தை ரசத்தை ஒரு பலம் விகிதம் பிரதி தினம் குடித்தால் கண்டமாலை நிவர்த்தியாகும்.


கண்டமாலைக்கு வியோஷாதி குக்குலு :- திரிகடுகு சூரணம் 6-பலம், திரிபலை சூரணம் 3-பலம், தேவகாஞ்சனம்பட்டை சூரணம் 12-பலம், இவைகளின் மொத்த எடைக்கு சுத்திசெய்த குங்கிலிய சூரணம் சேர்த்து கலந்து 100-பலம் தேனில் போட்டு கலக்கி 1/8 முதல் 1/4 பலம் விகிதம் சாப்பிட்டால் கண்டமாலை கிரந்தி முதலியன நிவர்த்தியாகும்.

அஜமோதாதி தைலம் :- ஓமம், இரசசெந்தூரம், தாளகம்,மஞ்சள், மரமஞ்சள், யவக்ஷ¡ரம், சர்ஜக்ஷ¡ரம், கடல்நுரை,தவனம், சாம்பிராணி, குங்கிலியம், தும்மட்டி, நாயுருவிவிரை, வாழைகிழங்கு இவைகளை சமஎடையாக எடுத்து கடுகு எண்ணையில் போட்டி அதில் ஆட்டுமூத்திரம், கள்ளிப்பால், எரிக்கன்பால்,
இவைகளை கலந்து மந்தாக்கினியால் காய்ச்சி மேலுக்கு உபயோகித்தால் கண்டமாலைகள் நிவர்த்தியாகும்.

அபக்குவமாயிருந்தால் அதாவது பழுக்காமல் இருந்தால் மாவை கிளறி கட்டினால் பக்குவமாகும். பிறகு அதை அறுத்து இந்த தைலத்தை லேபனஞ்செய்தால் மிருதுவத்துவம் உண்டாகும்.

நிர்குண்டீ தைலம் :- நொச்சி, பொடுதலை, இவைகளதுகல்கத்தில் தைலத்தை தயார்செய்து அந்த தைலத்தை நசியஞ் செய்தால் கண்டமாலைகள் நிவர்த்தியாகும்.

குஞ்சாதி தைலம் :- குன்றிவேர், குன்றிவிரை இவைகளை இரண்டுபாகம் அதிகமான ஜலத்தில் கல்கஞ்செய்து அத்துடன் ஒருபாகம் எள் எண்ணெய் கலந்து தைலபக்குவமாக காய்ச்சி அப்பி யங்கனஞ் செய்தால் கண்டமாலைகள் நிவர்த்தியாகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக