வியாழன், ஜனவரி 14, 2010

உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்

உபதம்ச சிகிச்சை


பித்த உபதம்சத்திற்கு கைரிகாதி கியாழம் :- காவிக்கல், கஸ்தூரி மஞ்சள், மஞ்சிஷ்டி, அதிமதுரம், வெட்டிவேர், தாமரைத்தண்டு, சந்தனம், கரும் அல்லிக்கிழங்கு இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து குடித்தால் பித்த உபதம்சம் நிவர்த்தியாகும்.

பித்த ரக்தோபம்சத்திற்கு நிம்பாதி கியாழம் :- வேப்பன்ஈர்க்கு, மருதம்பட்டை, அரசம்பட்டை, கடம்புபட்டை, வேப்பன் பட்டை, நாவல்பட்டை, ஆலன்பட்டை, அத்திபட்டை, வஞ்சி இவைகளை சமஎடையாக கியாழம் காய்ச்சி அதனால் விரணத்தை கழிவினாலும் அல்லது லேபனஞ் செய்தாலும், இந்த தினுசுகளுடன்
நெய் சேர்த்து, கிருதம் தயார்செய்து சாப்பிட்டாலும் அல்லது மேற்படி தினுசுகளை சமஎடையாய் சூரணித்து சாப்பிட்டாலும், பித்தோபதம்சம் நிவர்த்தியாகும்.

சகலஉபதம்ஸரோகத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்புடல், வேப்பன் ஈர்க்கு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் நிலவேம்பு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது கருங்காலி, வேங்கை இவைகள் கியாழத்தில் குங்கிலியசூரணத்தைக்கலந்து குடித்தாலும், அல்லது திரிபலை சூரணத்தைக் கலந்து குடித்தாலும் சகல உபதம்ஸரோகங்களும் நிவர்த்தியாகும்.

ஆமிரத்துவக்சுவரசபானம் :- மாம்பட்டையை இடித்து 1 பலம் இரசத்தை எடுத்து அதில் நாலு பலம் பால் கலந்து ஏழு நாள் காலையில் சாப்பிட்டு வந்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

சூரணம் :- வேலன் இலை சூரணத்தையாவது மாதுழம்பட்டை சூரணத்தையாவது அரைத்து லேபனம் செய்தால் உபதம் ஸரோகம் நிவர்த்தியாகும்.

ஐந்துவிதஉபதம்ஸத்திற்கு சகலவியாதி ஹரண ரசம் :-
உலாந்தர லிங்கத்தில் எடுத்த ரசம் 1 பாகம், சுத்திசெய்தரசகற்பூரம் 2 பாகம், சுத்திசெய்த கெந்தகம் 1 பாகம், இவைகளை கல்வத்திலிட்டு மூன்று நாள் அரைத்து அதை கோழி முட்டையில்வைத்து அதற்கு 5 சீலைமண் கொடுத்து 1 நாள் வாலுகாயந்திரத்தில் மூன்று வித அக்னியால் எரித்து ஆறிய பிறகு எடுத்து 1/2 1 குன்றி
எடை நோய்க்குத் தக்கபடி தேனில் உள்ளுக்குக் கொடுத்தால் இருதயசூலை, கபவாதம், உபதம்ஸம் இவைகள் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனாதி லேபனம் :- கஸ்தூரிமஞ்சள், காடுவாழைப்பட்டை, கடுக்காய் இவைகளை சூரணித்து தேனில் கலந்து லேபனம் செய்தால் கொருக்கு விரணம் விரைவில் பக்கு கட்டி ஆறும்.

பாரதாதி லேபனம
் :- இரசம், கெந்தி, தாளகம், லிங்கம்மனோசிலை இவைகள் வகைக்கு 1/4 பலம், முருதார்சிங்கி, சீமைகல் நார், இவைகள் வகைக்கு 1/2 பலம் இவைகளை கல்வத்திலிட்டு மைபோல்லிடித்து துளசி இலை ரசத்தினால் அரைத்து நிழலிலுலர்த்திபிறகு ஊமத்தன் இலை ரசத்தினால் அரைத்து மாத்திரைகள் செய்து பசும்நெய்யில் பயறளவு இழைத்து தடவினால் கொருக்கு வியாதி நிவர்த்தியாகி விரணமும் பக்கு கட்டி ஆறும்.

வடப்ரரோகாதி லேபனம் :- ஆலம்விழுது, மருதம்பட்டைநாவல்பட்டை, கடுக்காய், லோத்திரம், மஞ்சள் இவைகள் யாவையும் அரைத்து பாலில் கலந்து லேபனம் செய்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி லேபனம் :- திரிபலையை சுட்டு கரியாக்கி, தேனுடன் கலந்து லேபனம் செய்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

லிங்கரோகஹர லேபனம் :- பெரிய சங்கை, தண்ணீர் விட்டு அரைத்து லிங்கத்திற்கு லேபனஞ் செய்தால் உபதம்சரோகம் நிவர்த்தியாகும்.

கோஷ்டம், பச்சைப்பாகு, வசம்பு இவைகளையாவது காசிக்கட்டியையாவது தண்ணீர் விட்டு அரைத்து தடவினாலும் அல்லது வீக்கம் பக்குவமானபொழுது திரிபலை கியாழத்தினால் ஆண்குறியை பலதடவை கழுவினாலும், ஆண்குறியின் வீக்கம் குணமாகும்.

பூநிம்ப கிருதம் :- நிலவேம்பு, வேப்பன், திரிபலை,புங்கன்,பேய்ப்புடல், கருங்காலி, வேங்கை இவைகளின் பட்டைகள் சமஎடையாக எடுத்துகொண்டு கற்கஞ்செய்து அதில் நெய் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி குடித்தால் சகலமான கொருக்கு வியாதிகள் நீங்கும்.

கரஞ்சாதி கிருதம் :- புங்கன்விரை, மருதம்பட்டை, வேப்பன் பட்டை, நாவல்பட்டை, ஆலன்பட்டை இவைகளை சமஎடையாக கற்கஞ்செய்து அதில் நெய் கலந்து நெய் காய்ச்சி பதமாக லேபனஞ்செய்தால் எரிச்சல், விரணம், நீர்வடிதல் சிகப்பு இவைகளுடன் கூடிய கொருக்கு வியாதி நிவர்த்தியாகும்.

திரிபலாதி பிரக்ஷ¡ளனம் :- திரிபலை கக்ஷ¡யத்தில் விரணத்தை கழுவிக்கொண்டுவந்தால் கொறுக்கு நிவர்த்தியாகும்.

அசுவத்தாதி பிரக்ஷ¡ளனம் :- அரசன்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை, ஆலன்பட்டை, இவைகளை சமஎடையாக  கியாழம் வைத்து இரணத்தை கழுவி வந்தால் விரணத்தினால் வீக்கம், கொருக்கு இவைகள் குணமாகும்.

உபதம்சரோகத்திற்கு பத்தியங்கள் :- ஆட்டுப்பால், கோதுமை சாதம் இவைகள் பத்தியம்.

அபத்தியங்கள் :- பகல்நித்திரை, மூத்திரவேகத்தை தடுத்தல், குருகரமான அன்னம், மாதர் புணர்ச்சி, வெல்லம், ஆயாசம், புளிப்பு, மோர் இவைகள் ஆகாது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக