ஞாயிறு, ஜனவரி 10, 2010

விஷபாக ரோகம் - ரோக நிதானம்


விஷபாகரோகம்

செம்பின் களிம்பு மீன் முள் முதலியவைகள் சேர்ந்த உணவையருந்தல், சாநிய அன்னம், மழைசலம், காடித்தண்ணீர், நோய்மாதர் சேர்க்கைம், முதல் நாளில் சமைத்த பதார்த்தம் அழுகிய மாமிசம் என்னும் இவைகளால் எண்வகை விஷபாக ரோகம் உண்டாகும் அவைகளை அடியிற் காண்க :-

1. வாத விஷபாகம் :- ஒருபக்கத்தில் வீக்கம், சரீரம் வாட்டத்திலும் வெளிறல், கணதி, உறக்கம், பசியின்மை, மலச்சிக்கல் என்னுங் குணங்களை உண்டாக்கும்.

2. பித்த விஷபாகம் :- சர்வாங்கத்தினவு, வெடிப்பு, கிரந்தி, பாரிப்பு, எரிவு, சுரம், ஊறல், அசதி, நித்திரையின்மை, மேல்மூச்சு, என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. சிலேஷ்ம விஷபாகம் :- தேகமுற்றிலும் மிகுநமைச்சல், வெளிறல், வீக்கத்துடன் வெடித்தல், வறவறப்பு, தாபச்சுரம், குளிர், அற்ப இருமல், கோழை, சுடுகையுடன் சிறுநீரிறங்கல்,
மேல்மூச்சு என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. தொந்த விஷபாகம் :- மூர்ச்சை, மிகுந்ததாகம், அடிக்கடி நீரிறங்கல், விக்கல், மயக்கம், தேகம் வெளுத்து கண்ணூதலுடன் வீக்கம், அருசி, பிரமை, பேதி, வாய்நீருரல் என்னுங் குணங்களுடையது.

5. வாத விஷபாகம் ::- சேறுபோல் பேதி, குதத்தில்
இரணத்துடன் ரத்தம்கசிதல், சுவாசம், சுரம், மயக்கம், காந்திய கொள்ளின்மனம்போல் சரீரவாசனை, முகவீக்கம், வியர்வை, அசதி,
பிதற்றல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

6. அக்கினி விஷபாகம் :- வாதபித்தாதிக்கம், தேகமிளைததல், வீக்கம், புரளல், கோழை, இருமல், வாந்தி, மூர்ச்சை, வாய் நீருரல், வயிறுளைதல், மலசலச்சிக்கல், பக்கநோய் என்னும் குணங்களை உண்டாக்கும்.

7. எரிச்சல் விஷபாகம் :- வாயினால் ரத்தம்வீழ்தல், எரிச்சல், கோழை, சுவாசம், மார்பில் அடைப்பு, இரணம், அதில் மாமிசம் வளரல், குத்தல், கட்டிபோல் நெஞ்சிற்காணல், பேதி, வீக்கம்
என்னும் குணங்களை உண்டாக்கும்.

வாதபித்த சிலேஷ்மதொந்த விஷபாகரோகங்கள் சாத்தியம். மற்ற நான்கும் அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக