ஞாயிறு, ஜனவரி 10, 2010

மதாத்யயம் -ரோக நிதானம்

சுக்கிலம், காமசலம், பலம், கொழுப்பு, முதலியவைகளுக்கு
மதம் என்று பெயர். இதுகளை நாசம் பண்ணுங்கால், மாதாத்திய ரோக முண்டாகும், அப்பொழுது சோருதல், நானாவிதமான மலம் நழுதல் இடைவிடாத தாகம், உஷ்ணசுரம், சீதளசுரம், அரோசகம், மார்பிலும்
சிரசிலும்,தோட்களிலும், விலாப்பக்கங்களிலும், மர்மஸ்தானங்களிலும், தொண்டையிலும், அதிக நோய், நடுக்கல், கல் அடைத்துக்கொண்டது போல் மார்பு அடைத்தல், கண்களில் இருட்கம்மல், இருமல், இரைப்பு,
நித்திரை பங்கம், வியர்வை, ஒருவேளை மலபந்தம், சித்தபிரமை, வீக்கம் பிரலாபம், வாந்தி, மார்பிற்சங்கடம், மயக்கம், துர்ச்சொப்பனம், என்னும் குணங்களுடையது.

இந்த ரோகமானது வாதாதி தோஷங்களை அனுசரித்து நான்கு பேதங்களாக யிருக்கிறது. மேற்கூறிய குணங்களை தோஷத்திற்கு தக்கவாறு அடைந்திருக்கும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக