புதன், ஜனவரி 27, 2010

சித்த மருத்துவம் -part -3




சித்த மருத்துவத்தில் நோய்த் தேர்வு முறை
நோய்த் தேர்வு
சித்த மருத்துவத்தில் நோய் நாடி’–நோயைக் கண்டறியும் தேர்வுமுறை சிறந்து காணப்படுகிறது. நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன் நோயைக் கண்டறிய வேண்டும் என்பதே மருத்துவக் கொள்கை. நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முறை நோய்த் தேர்வு முறை’ எனப்படும்.
நோயைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு வகை மருத்துவத்திலும் வெவ்வேறு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் காணப்படும் நோய்த் தேர்வு முறைபிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் சிறந்த தேர்வு முறையாகவும் கருதலாம்.
எண்வகைத் தேர்வு முறை
சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடிபரிசம்நாக்குநிறம்மொழிவிழிமலம்மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன.
"" நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி
மலம் மூத்திரமிவை மருத்துவ ராயுதம்''
என்றும்,
மெய்க்குறி நிறந்தொனி விழிநா விருமலம் கைக்குறி’’ என்றும் குறிப்பிடுவர்.
எண்வகைத் தேர்வு என்பது பிணியை அறியும் முறையைக் குறிக்கிறது. உடலைப் பிணிப்பது நோய் என்பதனால்நோயைப் பிணி என்னும் சொல்லாலும் குறிப்பிடுவர். நோயறிதல் என்பதுநோயைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முறை எனலாம்.
நாடி
நாடிதாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடிவாதம்பித்தம்ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும்.
சுருங்கக் கூறின்நாடியைக் குறிக்கும் தாதுஉடலில் உயிர் தங்கி யிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும். 
தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று புரிகளாகக் கருதப்படு கின்றன. அவையே வாதம்பித்தம்ஐயம் எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்புஎழுவகைத் தோற்றம்எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும் என்பர்.
நாடிகளின் தொகை
உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.
நாடிகளின் எண்ணிக்கை
நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலைபிங்கலைசுழிமுனைகாந்தாரிகுகுசங்கினிஅசனிஅலம்புடைபுருடன்சிங்குவை என்பன.
இப்பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலைபிங்கலைசுழு முனை என்பன.
நாடிகளும் இயங்கும் இயக்கமும்
நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.
1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.
2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.
3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.
4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.
5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.
6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.
7. அசனி – வலது காதில் நிற்கும்.
8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.
9. சங்குனி – குறியில் நிற்கும்.
10. குகு – அபானத்தில் நிற்கும்
என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாயுக்கள்
நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போலவாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால்நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.
வாயுக்கள் பத்து வருமாறு
பிராணன்அபானன்வியானன்உதானன்கூர்மன்தேவதத்தன்சமானன்நாகன்கிரிகரன்தனஞ்செயன் என்பனவாகும்.
வாயுக்களின் இயக்கம்
நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.
வாயுக்களின் இயக்கம் விபரம்
1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலைபிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டிமூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.
2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.
3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.
4. உதானன் – கழுத்தில் நின்று உணவுநீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.
5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.
6. தேவதத்தன் – கொட்டாவிஉடம்பு முறுக்கலை உண்டாக்கும்.
7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.
8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.
9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.
10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.
பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்றுசிரசில் முட்டிநெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும். மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.
இவ்வாறுபிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும்நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும். இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.

உயிர்த்தாதுகள்
நாடிகள்வாயுக்கள் போலத் தாதுகள் உடலை இயக்கும் ஆற்றல்களாக அமைந்துள்ளன. இத்தாதுகள் உடலில் குறைந்தால் உடலின் இயக்கத்தில் குற்றம் நேரும் என்பதால் இவை உயிர்த்தாதுகள் என அறியப்படும். அவைஇரசம்இரத்தம்தசைகொழுப்புஎன்புமச்சைவிந்து என்பன வாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக உடலில் இயங்குகின்றன.
1. இரசம் – உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவு தரும்.
2. இரத்தம் – உயிரைக் காக்கும்.
3. தசை – உடலைத் தாங்கும்அசைவுபலந்தரும்.
4. கொழுப்பு – உடலிலுள்ள தசைச் சந்துகளையும் என்புச் சந்துகளையும் தூர்த்து நிரப்பும். நெய்ப்பசை யூட்டும்.
5. என்பு – உடலை உயர்த்தி நிறுத்தித் தாங்கும்.
6. மச்சை – என்புத் துளைகளில் நிரம்பும்.
7. விந்து – இனப் பெருக்கத்தை ஏற்படுத்தும்.
என்று ஏழு தாதுக்களின் இயக்கம் உரைக்கப்பட்டது. இவற்றினால் தாதுகள் உடலுக்கு எந்த அளவுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன என்பது விளங்கும்.
நாடிவாயுதாதுஇவற்றுக்குள்ள தொடர்பு
நாடிகள் பத்துள் இடகலைபிங்கலைசுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இடகலை வாத நாடியாகவும்பிங்கலை பித்த நாடியாகவும்சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். வாயுக்கள் பத்துள் அபானன்பிராணன்சமானன் ஆகிய மூன்றும் வாதம்பித்தம்ஐயம் ஆகிய நாடிகளுடன் இணைந்திருக்கும். அதேபோலதாதுகள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால்வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும்.
எனவேநாடிவாயுதாதுகள் ஆகியவை உடலை இயக்கவும்காக்கவும்தாக்கவும்அழிக்கவும்ஆக்கவும் காரணிகளாக அமைகின்றன என்பது பெறப்படுகிறது. இவற்றின் இயக்கம் சீராகவும்முறையாகவும் அமைந்தால் உடல் நோயற்று இருக்க வகையேற்படும். அவை சீராக அமையாமல் முறை தவறினால் நோயோ நோய்க்குரிய பிற குற்றங்களோ உடலுக்கு நேர வழியேற்படும்.
நாடிகளில் மூன்று
நாடிகளில் வாதம்பித்தம்ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. இம்மூன்று நாடிகள் உடலுக்கு உற்ற நோய்த் துன்பத்தினைக் கணித்தறிய உதவும்.
"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று''
என்னும் திருக்குறள்மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று உரைக்கக் காண்கிறோம். அவ்வாறேமருத்துவ நூல்களும் வாதம் முதலாக உடைய மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.
மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளே யன்றிநோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும்வெறியேற்றமும்தனித்தும்பிற தாதுகளோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர்தசைகளின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய் போல் பயன் படுவது ஐயம். இவைஉணவின் செயல்களினாலும்ஒவ்வாமையாலும்இயற்கை மாறுபாட்டினாலும்மிகுதலும்குறைதலும் நேரும் பொழுதுஅவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.
மேலை நாட்டு மருத்துவர்கள் வாதம் முதலிய மூன்று நாடி களையும் இரத்தம் (ஞடூணிணிஞீ)ஐயம் (ணீடடூஞுஞ்ட்)பித்தம் (ஞிடணிடூஞுணூ)கரும்பித்தம் (ட்ஞுடூச்ணஞிடணிடூஞுணூ) என நால்வகை நீரகங்களாகப் (டதட்ணிணூண்) பகுப்பர் என்றதனால்மேலை நாட்டு அறிஞர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் சித்த மருத்துவ முன்னோர்களால் நாடிமுறைகள் அறியப்பட்டிருக்கின்றன.
நாடிகளின் செயல்கள்
நாடிகள் மூன்றும் உடலைக் காக்கவும்அழிக்கவும் செய்ய வல்லன என்பதை மருத்துப் பாரதம் விளக்குகிறது.
வாதம் படைப்புத் தொழிலுக்கும்பித்தம் காக்கும் தொழிலுக்கும்ஐயம் அழிக்கும் தொழிலுக்கும் உடையன
"" சூழ்ந்தது சுக்கிலத்திற் சுரோணிதங் கலக்குமன்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திய குமிழி போல''
என்றுமூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்துஆராய்ந்துநோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகிறது. அவை மறைவிடம்குதிக்கால்சந்துஉந்திகைமார்புகழுத்துபுருவமத்தி,காதுமூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் நடந்து கொண்டிருப்பதனால்அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை
ஆராயலாம்  என்றுரைக்கப்படுகிறது.
நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றனஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும்ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால்கைகளில் ஆணுக்கும்பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால்ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுநுட்பமான அறிவியல் உண்மையாகும்.
நாடிகளை ஆராயும்போதுகையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்கமுதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும்இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும்மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.
நாடி வேளை நேரம்
வாதம் பகலும் இரவும் 6 10 மணி
பித்தம் பகலும் இரவும் 10 2 மணி
கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 6 மணி
என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப் பட்டுள்ளன. இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் தொந்தமானாலோமாறுபட் டாலோ நோயோ மரணமோ உண்டாகு மென்று உணர்த்தப்படுகிறது.
நாடிகளும் காலமும்:
"" காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்
பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்
மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''
பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும்அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும்மாலை பத்து நாழிகை ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். அஃதேபோல்ஞாயிறு மறைவிற்குப்பின் முன்னிரவு பத்து நாழிகை வாதமும்அதன்பின் நல்லிரவு பத்து நாழிகை பித்தமும்பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். இதனை வாதபித்தஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம்’’ எனவும் கூறுவர்.
நாடிகளும் மாதங்களும்
"" கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்
கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்
விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்
விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்
திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்
சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்
நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்
நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''
கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகைமாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்,
நாடிபார்க்கும் மாதம்வகை:
"" சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்
அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்
மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி
வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''
"" தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்
மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்
தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று
நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''
சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும்ஆனிஆடிஐப்பசிகார்த்திகையில் நண்பகலிலும்மார்கழிதைமாசியில் மாலை எற்பாடு வேளையிலும்பங்குனிஆவணிபுரட்டாசியில் இரவிலும் நாடி களைக் கணிக்க நவின்ற நேரமாகும் என்பதனால்இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. வாதபித்தஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும்காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம். அதே போல,
ஆடிஆவணிபுரட்டாசிஐப்பசி ஆகிய திங்களில்வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகைமார்கழிதைமாசி ஆகிய திங்களில்ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனிசித்திரைவைகாசிஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். அவ்வாறேசிறு பொழுதான ஆறில்வைகறையில் வாதமும்நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும்.
இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.
நாடி தெரியாத பேர்கள்
பெண்போகர்நீண்டகால நோயாளிகுதிரை ஏற்றம் செய்தோர்யானை ஏற்றம் செய்தோர்வழி நடைப்பயணிபேருண்டி உண்டோர்போதைப் பொருள் கொண்டவர்நீர்ப்பாடுநீரிழிவுபெருநோய்வீக்கம் ஆகிய நோய்களுற்றோர்அத்தி சுரத்தால் இளைத்தவர்பயமுற்றோர்துன்பமுற்றவர்விடந் தீண்டியவர்ஓட்டமுற்றவர்அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர்சூல் கொண்ட பெண்மாதவிடாயான பெண்பெரும்பாடுற்ற பெண்அதிகம் தூங்கியோர்எண்ணெய் தேய்த்து முழுகியவர்சினங்கொண்டோர்மோகங் கொண்டோர்முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர்மதங்கொண்டோர்பெருத்த உடலினர்என்பு முறிந்தோர்சோகை நோயினர்பிணத்தைத் தொட்டோர்வாந்திவிக்கல் எடுத்தோர்விரத மிருப்பவர்மழையில் நனைந்தோர்இசைப் பாடகர்களறி ஆடுவோர்நாட்டியமாடிக் களைப்புற்றோர்மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி நடையைக் கணித்தறிவது அரிதாம்.
மேலே குறிப்பிடப் பட்டிருப்போரில் பெரும்பாலோர் மெய்ப் பாட்டுணர்ச்சியால் அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த வேளையில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும்கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த வேளையில் நாடித் தேர்வு நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால்நாடி தெரியதாக பேர்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பூத நாடி:
வாதம்பித்தம்ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல.
நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’
என்பதற்கிணங்கநாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.
"" சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி
தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''
என்றதனால்ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும்.
ஆராயுமிடத்து வாதபித்தஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.
இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்குச் சுக சன்னிமார்க்கமாகும். அவன் சாகான். காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.
பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேருறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்துநாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.
குருநாடி:
வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுறுவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும்காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும்சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும்இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலைகனவுஉறக்கம்துரியம்துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாதபித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலைகனவுஉறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.
குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பது வெள்ளிடைமலை. ஆகவேகுரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணர வல்லன் அல்லன். யோக வல்லமையினால் தான் அறியமுடியும். குருநாடிவாதபித்தஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.
"" தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்
தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே''
என்பதினால்குருநாடி வாதபித்தஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. தமரகம்’ எனும் இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதே போல குரு நாடியானது வாதபித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்றதனால்குருநாடிநாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும்மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.
நாடி நடை
நோய் அற்றபோது ஒரு வகை நடையும்நோய் உற்ற போது ஒருவகை நடையும்நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரியிருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள்பறவைகள்ஊர்வனபூச்சிபுழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.
வாத நாடி
"" வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்''
வாத நாடியானது இயல்பினில் அன்னம்கோழிமயில்போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவைமண்டூகம் தாவுவது போலும்ஓணான் போலும்பாம்புஅட்டைவேலிக்குருவிஆமை போலவும் நடக்கும்.
பித்த நாடி
"" ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்''
பித்த நாடியானது இயல்பினில் ஆமைஅட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவைநாகரிகமான அன்ன நடை போலும்மயில் போலும்தாரா போலும்மாடப் புறாஊர்க்குருவி போலும் கருடப் போத்துசிங்கம்பாம்புபிள்ளை குதிப்பது போலமதயானை போலசிறு காக்கை தூங்குவது போலநடக்கும். 
ஐய நாடி
"" போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே''
ஐய நாடியானது இயல்பினில் தவளைபாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடைகொக்கினது உறக்கம்ஊர்க் குருவிசிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும்.
பாம்பு நடையெனப் பதுங்கியும்அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும். 
பூத நாடி
பூத நாடியானது இயல்பினில்கல்லெறிதல்ஆட்டுக்கிடா பாய்ச்சல்செக்கிடை திருகல்சீறுகின்ற மூஞ்சூறுபந்தடித்து எழும்புதல்ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும்.இதிலிருந்து மாறுபடும் போது,
பூனைபோல நடக்கும்வெள்ளெலி போல குன்றியும் 
வண்டுபோல ஊர்ந்தும் பாம்பு போல நெளிந்தும் 
சங்கு போல ஊர்ந்தும்கார்வண்டு போல ஊர்ந்தும் 
பூதத்தைப் போல ஊர்ந்தும்தேரை போல தாண்டியும் 
காக்கைபோலக் குதித்தும் நெருப்பு போல சுட்டும் 
செக்குபோலச் சுற்றியும் நடக்கு மென்றறியலாம்
என்பதனால்மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும்முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாகவளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவி களுக்கு ஈடாகவிரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மைநோயுற்ற காலம்முதிர்ச்சிமரணத்தின் எல்லை என்பவற்றை யெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு அமைந்திருக்கிறது.
நாடிகளும் அளவுகளும்
நாடிகளை ஆராயும் போது அவற்றுக்கு உரிய அளவுகளின்படி அமையாமல் குறைந்தோ கூடியோ தோன்றுகின்றனவா என்று அறிவதற்கு நாடிகளின் இயல்பான அளவுகள் குறிப்பிடப் படுகின்றன.
வாத நாடி ஒரு மாத்திரை அளவும்பித்த நாடி அரை மாத்திரை அளவும்ஐயநாடி கால் மாத்திரை அளவும் என மூன்று நாடிகளின் அளவும் குறிப்பிடப் படுகின்றது. இந்த அளவுகளில் மூன்று நாடிகளும் தோன்றினால் உடலில் ஒரு குற்றமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஒரு மாத்திரை என்பது ஒரு கை நொடி அல்லது கண்ணிமைக்கும் கால அளவு ஆகும்.
நாடிகளுக்குரிய காலங்கள்
நாடிகளை எல்லா வேளையிலும்எல்லாக் காலங்களிலும் பார்த்தால் அதற்குரிய இயல்புகள் அறிய முடியாமற்போகும் என்பதால்நாடிகளுக்குரிய காலங்களாகச் சிறுபொழுதுபெரும்பொழுது ஆகியவற்றில் உரிய காலத்தை உரைத்துள்ளனர்.
"" காலமே சேத்தும நாடி கட்டுச்சிப் பித்த நாடி
மாலையில் வாத நாடி வகை தப்பிப் பிதறி நின்றால்
... ... ... ... ... ... ... ...
நாலஞ்சில் மரணமென்று நன்முனி யருளிச் செய்தார்.''
நாடித் தேர்வினால் அறியக் கூடிய நோய்கள்
நாடிகள் நடக்கும் இயல்பைக் கொண்டு உடலில் தோன்றிய நோய்களைக் கண்டறிவது மருத்துவத்தில் இயல்பானதாகும். நாடிகளைக் கொண்டு அறியப்படும் நாடிகள்இயல்புக்கு மாறாக நடந்தால் அதுதொந்தம் என்று குறிக்கப்படும்.
(டி) வாதம் கால்பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடிகள் தோன்றினால்வாந்திமந்தம்வயிற்றெரிச்சல்சுரம்கண்ணில் காந்தல்பாண்டுமூலம் ஆகிய நோயும்,
செவி அடைப்புஉடல் வெதுப்புஉடல்வலிஉடல் நடுக்கம்மூத்திர எரிச்சல்போன்று உடலில் குணங்களும் காணப்படும். 
(டிடி) வாதம் முக்கால்பித்தம் அரைஐயம் கால் என்னும் அளவில் நாடிகள் தோன்றினால்உடல் வேர்க்கும்சீதளம் உண்டாகும்மேகம் உண்டாகும்உடல் தடிக்கும்காலில் வெடிப்பு உண்டாகும். 
(டிடிடி) பித்தம் அரைஐயம் அரைவாதம் கால் என்னும் அளவில் நாடிகளின் நடை தோன்றினால்வாய் காந்தும்வாயில் நீரூரும்கண்ணுழலும்இருமல் உண்டாகும்கால்களில் வெடிப் புண்டாகும். 
(டிதி) வாதம் ஒன்றுபித்தம் ஒன்றுஐயம் ஒன்று என நாடி நடையிருந்தால்,
சாவில்லை சாகாம லிருக்கலாகும்
சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்
சாவில்லை நோயில்லை வறுமையில்லை''
என்றதனால்மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய உடலினர்க்கு இவ்வாறான நாடி நடை அமையுமென்று தெரிகிறது.
(தி) ஐயம் ஒன்றுபித்தம் கால்வாதம் கால் என்னும் அளவில் நாடி நடை அமைந்தால் காது அடைக்கும்தலையில் வியர்வை உண்டாகும்கண் மூக்கில் நீர் வடியும்மயக்கம் உண்டாகும்.
(திடி) வாதம் கால்பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடி நடை அமைந்தால்வாய்வு தொடர்பான நோய்கள் உண்டாகும்.
(திடிடி) வாதம் ஒன்றுபித்தம் முக்கால்ஐயம் ஒன்று என்னும் அளவில் நாடி நடந்தால் தொப்புளுக்கும்தொண்டைக்கும் மூச்சிழுக்கும்நெஞ்சடைக்கும்உடல் முழுவதும் நோவும்மரணம் நெருக்கத்தில் வந்து விட்டதென்று அறியலாம்.
என்று நாடிகளின் தொந்தத்தால் பல நோய்களைக் கண்டறியும் குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும் பகுதி நாடிகள் மரணத்தின் அறிவிப்பைத் தெரிவிக்க கூடியதாகக் காணப்பட்டாலும்அவற்றின் அறிகுறியை அறிந்த பின்பு அதற்கான மருந்துகளைக் கொண்டு மரணத்திலிருந்து மீளுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
நாடிமுறைத் தேர்வின் மூலம் அறியக் கூடிய நோய்களாக மருத்துவ நூலார் குறிப்பிடுகின்ற வாத நோய்த் தொகைபித்த நோய்த் தொகைஐய நோய்த்தொகைதொந்த நோய்த் தொகை என்னும் நோய்கள் அனைத்தும் அறியலாம் எனத் தெரிகிறது.
நாடிகளை அறிக்கூடிய முறைவகுப்புபயிற்சிஅடிப்படைகள் என எதுவும் நாடி நூல்களில் காணப்பட வில்லை. அல்லது கிடைத் துள்ள நாடி நூல்களில் அவ்வாறான பாடல்கள் இணைக்கப் பெற வில்லை.
நோயறியும் முறைகளில் நாடி முறை மிகவும் துல்லியமாகக் கணிக்கப்படுவதாகக் கருத்து நிலவுவதால்அவை பற்றிய அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சித்த மருத்துவத்துக்கு மட்டுமல்லாது உலக மருத்துவத்துக்கே அது உதவியாக இருக்கும்.
நோயாளிக்கு உற்ற நோயின் தன்மையை அறியவும்நோயின் வகையை அறியவும் எண்வகைத் தேர்வுகள் பயன்படுகின்றன. அவ்வாறான தேர்வுகள் மூலம் நோயாளியின் நிலையை அறிய முயல்கின்றனர். அவ்வகையில் ஒலிஉணர்வுவடிவம்சுவைநாற்றம்மலம்மூத்திரம்எச்சில்விந்து ஆகிய ஒன்பதைத் தேரையர் நூல் விவரிக்கக் காண்கிறோம். அந்நூல் காட்டும் முறைகள் வருமாறு:
1. ஒலித்தேர்வு
நோயுற்றவர் பேசுகின்ற போது அவரின் பேச்சு அவரின் இயல்பு நிலையினிலிருந்து மாறுபட்டுவீணையினது நாதத்தைப் போலும்கின்னரி இசைப்பது போலவும்குழல் இசைப்பது போலவும் சன்னமாகவும்நாயின் சத்தத்தைப் போலவும்ஈச்சு கொட்டுகின்றதைப் போலச் சத்தமும்மலை எதிரொலிப்பதைப் போன்ற ஓசையும்கிணற்றில் பேசுவது போலவும்எக்காளம் போன்ற ஓசையும்பேரியம் கொட்டுகின்றதைப் போன்ற முழக்கமும் இருக்குமேயானால் வீணை யிசைக்கு ஒரு நாழிகையிலும்கின்னரத்திற்கு பத்து நாழிகையிலும்குழலோசைக்கு நூறு நாழிகையிலும்நாயோசைக்கு ஆயிரம் நாழிகையிலும்ஈச்சு கொட்டுகின்ற ஓசைக்கு இரண்டாயிரம் நாழிகையிலும்மலையோசைக்கு மூவாயிரம் நாழிகையிலும்எக்காளத்திற்கு நாலாயிரம் நாழிகையிலும்கிணற்றோசைக்கு ஐயாயிரம் நாழிகையிலும்பேரிய வோசைக்கு ஆறாயிரம் நாழிகையிலும்இறுதி வரும் என்று உரைக்கலாம்.
"" வீணையிசை நத்தோசை வேயோசை நாயோø
வீணையிசை நத்தோசை வெற்போசைவீணையிø
தாரையியம் பேரியியந் தப்பாதொன் றாதிலக்கந்
தாரையியம் பேர்கலைவி தான்''
என்பதனால்ஒலித்தேர்வு முறையினால் நோயைக் காணாமல் நோயாளிக்கு இறுதி நாள் எத்தனை நாழிகையில் வரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடற்குரியது.
2. உணர்வுத் தேர்வு
நோயாளியை மருத்துவன் தொடுகின்ற போதுமருத்துவனின் உணர்வில் நோயாளியின் உடல்முதலையினது முதுகைப் போல இருக்குமானால் பன்னிரண்டு நாளிலும்ஆமையினது முதுகு போல இருக்குமானால் ஐம்பத்தாறு நாளிலும்மீனினது வால்புறம் போல இருக்குமானால் நாற்பத்தைந்து நாளிலும்குளிர்ச்சி அதிகமாயிருக்கு மானால் பன்னிரண்டு சாமத்திலும்வெப்பமும் சீதளமும் தொந்தித்து இருக்குமானால் ஐம்பத்தாறு சாமத்திலும்அதிக காங்கை இருக்கு மானால் நாற்பத்தைந்து சாமத்திலும்மறைவிடத்தைப் பார்க்கும் போது யானைத் தோலைப் போல வன்மையாயிருந்தால் பன்னிரண்டு நாழிகையிலும்மரத்தைப் போன்றிருந்தால் ஐம்பத்தாறு நாழிகை யிலும்கல்லைப் போன்றிருந்தால் நாற்பத்தைந்து நாழிகையிலும் இறுதிவரும். இரத்த நாளமானாது தாமரைக் கொடியின் முள்ளைப் போலிருக்கு மானால் பன்னிரண்டு விநாடியிலும்தச்சு உளிபோல கூர்மையாக இருக்குமானால் ஐம்பத்தாறு விநாடியிலும்ஆரம்போலக் கருக்குடன் இருக்குமானால் நாற்பத்தைந்து விநாடியிலும் இறுதி வருமென்று உரைக்கலாம்.
உணர்வுத் தேர்வு முறைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தோலில் தோன்றும் வேறுபாடுகள் அனைவராலும் அறியக் கூடியதாக இருந்தாலும்அவ்வாறு தோன்றுவதற்குரிய அடிப்படைகள் என்னவென்னு அறியமுடியவில்லை. அறிவியல் அடிப்படையாக அமைகின்றனவா அல்லது அனுபவம் அடிப்படையாக அமை கின்றனவா என்பது கண்டறியப்பட வேண்டிய தெனலாம்.
3. வண்ணத் தேர்வு
நோயாளியைக் காணுகின்ற மருத்துவன் கண்களுக்குநோயாளி யின் வடிவம் சூரியனைப் போலச் சிவந்த வண்ணமும்மினுமினுப் பும் தோன்றுமேயானால் இரண்டு மாதத்திலும்சந்திரனைப் போல வெள்ளை நிறமுமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் மூன்று மாதத்திலும்செவ்வாயைப் போலச் சிவந்த நெருப்பு நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் நான்கு மாதத்திலும்வியாழனைப் போல பொன்னிறமென்னும் மஞ்சள் நிறம் தோன்று மேயானால் ஐந்து மாதத்திலும்வெள்ளியைப் போல வெண்ணிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஆறு மாதத்திலும்காரியைப் போலக் கருமை நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஏழு மாதத்திலும்உமையாள் போலக் கறுத்த பச்சை நிறமான நீலச் சாமள நிறத்துடன் மினுமினுப்பும் தோன்றுமேயானால் எட்டு மாதத்திலும்வண்ணம் தோன்றாமல் மினுமினுப்பு மட்டும் தோன்றுமேயானால் அந்த நிமிடமே இறுதி வரும் என்று உறுதியாகக் கூறலாம்.
“ என்றுமதி செவ்வாய் இரணியன்சுங் கன்காரி
யென்றுமதி செவ்வாய் இவையோடுமைஎன்றுமதி
அஞ்சுமா தக்கணமேல் ஆறுதிங்க ளாமினுக்கே
அஞ்சுமா தக்கணமே யாம்.''
இச் செய்யுளில் கிழமைகளையும் அவற்றிற்குரிய கோள்களின் வண்ணத்துடன் ஒப்பிட்டுக் காட்டிநோயாளியின் இறுதி நாள் எண்ணிக் காட்டப்பட்டுள்ளது. புதன் குறிப்பிடப்படவில்லை. அதற்காக உமை என்று உரைக்கப்பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது.
4. சுவைத் தேர்வு
நோயுற்றவர் அறுசுவைப் பொருள்களை உண்ணும் போது அந்தச் சுவை தோன்றாமல் வேறு சுவைதோன்றுவதாகக் கூறினால்அதனால் நோயுற்றவர் என்ன நிலையில் உள்ளார் என்பதைத் தெரிவிப்பதே சுவைத் தேர்வாகும்.
ஒரு சுவைப் பொருளை உண்ணும் போதுஅதற்குரிய சுவை தோன்றாமல்,வேறு எந்தப் பொருளை உண்டாலும் அந்தச் சுவை தோன்றுவதாகக் கூறினால்நோயின் முதிர்ச்சியால் எத்தனை நாளில் இறுதிவரும் என்பதை அறியலாம்.
கசப்புச் சுவையை உண்ணும் போது கசப்புத் தோன்றாமல் மற்றெந்தப் பொருளை உண்டாலும் கசப்பதாகக் கூறினால் ஏழு நாளிலும்இனிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு திங்களிலும்புளிப்புச் சுவை தோன்றாவிட்டால் பதினைந்து நாளிலும்காரச் சுவை தோன்றாவிட்டால் அரை நாளிலும்கரிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாளிலும்துவர்ப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாழிகையிலும் இறுதி வருமெனலாம். நோயாளியைப் பற்றிக் கொண்ட நோய் உயிரை வாங்கிக் கொண்டு போக நினைத்திருக்கிற காலத்தை இவ்வாறு அறிய வேண்டும்
இச்சுவைத் தேர்வு மூலம் நோயாளியின் நிலைமையை மருத்துவர் மட்டுமல்லமற்றவர்களும் அறியக்கூடியதாக அமைந்திருக்கக் காணலாம். நோயாளியின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து நிலை மையை அறிய உணர்த்தப் பெற்ற இவ்வாறான முறைகள் அரியவை யாக உள்ளன.
5. நாற்றத் தேர்வு
மலர்களிடத்து எழுகின்ற மணத்தை நோயாளி நுகர்ந்து பார்த்துஅந்த மலருக்குரிய மணம் தோன்றாமல் வேறு மணமாகத் தோன்றுவ தாகக் கூறினால் நோயாளியின் நிலையை அறிவிப்பது நாற்றத் தேர்வாகும்.
மூங்கிற்பூ மணம் அறியாவிட்டால் ஏழு வினாடியிலும்,
வேங்கைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாழிகைக்குள்ளும்,
தாழம்பூ மணம் அறியாவிட்டால் ஏழு சாமத்திற்குள்ளும்
அத்திப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாளிலும்,
கொன்றைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு மாதத்திற்குள்ளும்,
சிறுசண்பகப்பூ மணம் அறியாவிட்டால் பதினான்கு மாதத்திலும்,
மராமரப்பூ மணம் அறியாவிட்டால் மூன்று ஆண்டிற்குள்ளும்
இறுதி வருமென்று அறிந்து பார்த்துத் துணிவுடனே உரைக்க வேண்டும். என்று உறுதியாக உரைப்பதைக் கொண்டு மருத்துவ நூலாரின் ஆழ்ந்த புலமையும் ஆய்வும் தெளிவாகிறது.
6. மலத் தேர்வு
நோயாளியின் மலம் எந்த வடிவிலும்வண்ணத்திலும்தன்மை யிலும் இருக்கிறது என்றறிந்து நோயாளியின் நிலையை அறிவிக்கிறது.
வெள்ளாட்டுப் புழுக்கையைப்போல உலர்ந்து வரண்டிருந்தால்இறுதி அருகிலுள்ள தெனலாம். சற்றுக் குழம்பு போலிருந்தால் மிக நன்று. போதுமான நீர்த்தன்மையுடையதாய் கடினமுமில்லாமல்தளர்ச்சியு மில்லாமல்வெண்மையாயுமில்லாமலிருந்தால் மிக நன்று. செம்பு நிறம் மத்திமமாகவும்கறுப்பு நிறம் தீயதாகவும் இருக்கும். இத்தேர்வு அதிக ஆய்வும் விளக்கமுமில்லாமல்சாதாரணத் தோற்றத் தைக் கொண்டு பொதுவாக உணரப்படும் கருத்தைப் போலுரைக்கப் பெற்றவையாகும்.
7. நீர்த் தேர்வு
நோயாளியின் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அறியப்படுகின்ற கருத்து இங்கு விளக்கப்படுகிறது.
“ மாணிக்கம் போன்று சிவப்பாக இருந்தால் அசாத்தியம்
வெண்ணிறமானால் பொல்லாங்கு. தேன் போன்றிருந்தால் சாத்தியம்
ஆனாலும் நாளாகும்.
பொன்னிறமானால் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை''
இங்குக் குறிப்பிடப் பெற்ற நான்கு வகைகளில் இரண்டு அசாத்தியம் இறுதி நிச்சயமென்றும்இரண்டு சாத்தியம் ஆனாலும் நாளாகு மென்று ஒன்றிலும்மற்றொன்றில் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை என்பதைக் கொண்டு இறுதியாகக் கூறப்பெற்றதும் அசாத்தியம் போலவே தோன்றுகிறது. மூன்றாவதாகக் கூறப்பெற்ற தேன் போன்ற நிறத்தினை மட்டுமே நம்பி மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பதாக இருக்கிறது.
நீர்க்குறி
நோயாளியிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீர் வண்ணத்தைக் கொண்டுநோயாளியின் உடல்நிலை எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதைக் கண்டறியவே இவ்வாறான முறை சித்த மருத்துவத்தில் கையாளப் படுவதாகத் தெரிகிறது. சிறுநீரைக் கொண்டு ஆய்வுக்கூட முறையில் நோயை அறிய (அ) உடலில் இருக்க வேண்டிய சத்துப் பொருள்கள்உயிர்ப் பொருள்தாதுப் பொருள் போன்றவை இருக்கின்ற அளவு என்ன என்று கணித்தறியப் பயன்படுகிறது. இவ்விரண்டு வகையிலும் சிறுநீரைப் பயன்படுத்தினாலும் கண்டறியப்படும் அடிப்படையில் வேறு வேறாகத் தோன்றும்.
சித்த மருத்துவம் ஆராயும் சிறுநீர்த் தேர்வு முறையில்சிறுநீரின் அடிப்படையில் மஞ்சள்சிவப்புபச்சைகறுப்புவெண்மை என்னும் ஐந்து வண்ணங்கள் கொள்ளப்பட்டுஇவற்றின் பிரிவுகளாக இருபத்தொறு வண்ணங்கள் ஆராயப்படுகின்றன.
சிறுநீரின் பொதுத் தன்மையாக நிறம்எடைநாற்றம்நுரைகுறைதல் என்னும் ஐந்தினைக் குறிப்பிடுவர்.
சிறுநீர்த் தேர்வினால்உடலின் வெப்பக் குணங்களும்அதனால் உண்டாகக் கூடிய நோய்களும்வாதம்பித்தம்ஐயம் ஆகியவற்றினால் உண்டாகக் கூடிய உடலின் மாற்றமும் அறிப்படுகிறது.
சிறுநீர்த் தேர்வினால் கருப்பைஆண்குறியில் புண்கல்லடைப்புப் போன்றவற்றை அறியக் கூடும்.
“ காணிதில் சீழும் கலந்து இழிமணம் உறின்
கருப்ப நாபிகள் உளும் காமநா ளத்துளும்
விரணமுண்டு இன்றேல் எய்தும் அஸ்மரி யலது
இருத்தலே திண்ணம் எனமனத்து எண்ணே.''
சிறுநீரில் சீழும் நாற்றமும் வீசினால்கருப்பைகொப்பூழ்ஆண் குறியில் புண்ணும்கல்லடைப்பும் திண்ணம் என்கிறது.
நெய்க்குறி
சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்த்து சோதிக்கும் முறை வேறு மருத்துவத் துறைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை சித்த மருத்துவத்துக்கு மட்டுமே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்வகைத் தேர்வு முறைகளில் நெய்க்குறி என்னும் தேர்வு முறை சிறப்பானது என்கிறார் தேரையர். சிறுநீரில் ஒரு துளி அளவு நல்லெண்ணெய் விட்டுஎண்ணெய் நீரில் எவ்வாறு பிரிகிறது என்றும்தோன்றுகிறது என்றும் கண்டுநோயின் குற்றத்தைக் கண்டறிவது இம்முறை. எண்ணெய்த்துளி சிறுநீரில்பாம்புமோதிரம்முத்துசங்குஆசனம் போன்ற வடிவங்களாகக் காணப்பட்டால் அவற்றினால் நோய் கணிக்கப்படும். நோயாளியின் சிறுநீரும் எண்ணெயும் வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்தால்உயிர் நீங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது.
சிறுநீரின் இயல்பான வண்ணம் தெளிந்திருந்தால் வாத நோயும்மஞ்சளானால் பித்த நோயும்,வெளுத்து நுரைத் திருந்தால் ஐய நோயையும் காட்டுவதாக இருக்கும். சிறுநீரின் இந்த வண்ணம் எக்காலத்திலும் மாறாமல் இருக்குமென்றும் உரைக்கப்படுகிறது.
8. எச்சில் தேர்வு :
நோயாளியின் உமிழ்நீர் எட்டுவகையாகப் பிரிக்கப்பட்டுஅதனால் அறியப் பெறுவன உத்தமம்மத்திமம்அதமம் என்னும் மூன்று வகையில் கூறப்படுகிறது.
1. “உமிழ் நீரானதுஇளநீர் போன்றிருந்தால் முதன்மையான உத்தமமென்றும்,
2. பால் போன்றிருந்தால் இரண்டாவது உத்தமமென்றும்,
3. வெண்ணெய் போல் அழுந்தி வெண்மையா யிருக்குமானால் மத்திமத்தில் முதன்மை யென்றும்,
4. தயிரைப்போல் அழுத்தமும் வெண்மையும் இருக்குமானால் மத்திமத்தில் இரண்டாவதென்றும்,
5. குதிரை வாயிலிருந்து வெளியாகும் நுரைபோ லிருந்தால் அதன்மத்தில் முதன்மையென்றும்,
6. களியைப் போலிருந்தால் அதமத்தில் இரண்டாவ தென்றும்,
7. ஓட்டிலே சுடப்படும் ஓட்டடை போலிருந்தால் அதமத்தில் முதன்மையான அசாத்தியமென்றும்,
8. மாவைப்போல வறட்சியாக இருக்குமானால் அதமத்தில் அதமமான அசாத்தியமென்றும்இறுதி மிகவும் அருகில் இருக்குமென்றும் எட்டு வகைகள் உரைக்கப்படுகின்றன.
விந்துத் தேர்வு:
விந்துத் தேர்வும் எச்சில் தேர்வைப் போலவே உத்தமம்அதமம்மத்திமம் என்கிற முறையில் உரைக்கப்படுகிறது. அதாவது நோயாளியின் விந்து,
1. “வெண்ணெய் போன்றிருந்தால் உத்தமத்தில் முதன்மை,
2. தயிரைப் போன்றிருந்தால் உத்தமத்தில் இரண்டாவது,
3. பால்போன்றிருந்தால் மத்திமத்தில் முதன்மை,
4. மோர் போன்றிருந்தால் மத்திமத்தில் இரண்டாவது,
5. தேன் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை,
6. நெய்போன்றிருந்தால் அதமத்தில் இரண்டாவது,
7. கள் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை ஆனாலும் பொல்லாங்கு (தீமை)
8. தண்ணீர் போன்றிருந்தால் அதமத்தில் அதமம். முயற்சி வேண்டாம் என்று கைவிடலாம்
என்று கூறப்படுகிறது. நோயாளியின் உயிர் பிரியும் போது இரத்தமும் விந்துவும் நீர்த்துத் தண்ணீரைப்போல வெளியாகும். அவ்வேளையில் நோயாளியைக் காப்பாற்ற முயல்வது வீண் என்று கூறப்படுகிறது.

Post Comment

1 comments:

Munnetra Kadhaigal சொன்னது…

Really it was an infromational article.

கருத்துரையிடுக