ஞாயிறு, ஜனவரி 10, 2010

மத ரோகம் -ரோக நிதானம்

மதத்தை உண்டாக்குவது மதரோகம் எனப்படும். இது எழு
வகைப்படும். அவை யாவன :-

1. வாதமதம் :- ஈனதொனி, இடைவிடாத வார்த்தை பெற்றிருக்க வொன்று செய்கின்ற கெட்ட நடத்தை, தேகத்தில் கறுப்பு நிறம் அல்லது சிவத்த நிறம் என்னும் மிக்குணங்களுடையது.

2. பித்தமதம் :- தேகமானது மஞ்சள் அல்லது சிகப்பாக
பேதிக்குதல் கோபம், கலகப்பிரியம் என்னும் குணங்களுடையது.

3. சந்நி பாதமதம் :- வாதாதி முதலான மூன்று மதங்க
ளின் குணங்கள் ஏககாலத்தில் உண்டாகும். இது அசாத்தியம்.

4. ரத்தமதம் :- தேகமுங் கண்ணும் மரத்தலுடன் பித்தத்தின் ரோககுணங்களை யுண்டாகியிருக்கும்.

5.சிலேஷ்மமதம் :- தியானம் செய்பவர் போலிருத்தல் ஒன்றுக்கொன்று சம்மதமின்றி அதிக விரைவாக பேசுகின்றது போல் தேகம் வெளுத்தல் என்னும் குணங்களுடையது.

6. மத்தியபான மதம் :- சரீரத்தில் பலவித கெடுதி, முகத்தில் ஒளி நீங்குதல், தொனிகெடல், எவர்களிடத்தும் நிராசை என்னும் குணங்களுடையது.

7. விஷமதம் :- மேற்கூறிய மதகுண்ங்களை விட அதிகமான துர்குணங்களையுடையது. நடுக்கல் மிகநித்திரையுடையது.

இவ்வேழு மதங்களிலும் ரத்தபித்தரோகங்களில் எல்லாம்
உண்டாகியிருக்கும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக