ஞாயிறு, ஜனவரி 10, 2010

தானியங்கள் -பண்பு & குணங்கள்

பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும்.
பத்தியத்திற்குதவாது.

புழுங்கலரிசி :- இது பாலர்முதல் விருத்தர்வரை யாவருக்கும் நோயாளிகட்கும் பொருத்தமான
உணவாகும். பத்தியத்திற்காகும்.

கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமே
கத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.

சோளம்:- ச்ச் தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும் .

கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேதிக
ளுக்கு சிறந்த உணவாகும்.

கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின்
வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி யென்பர்.

கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு முதலியவைகளை
உண்டாக்கும். மருந்தின் குணத்தைக்கெடுக்கும்.

உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம் இடுப்பிற்கு
பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.

துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.
இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும்,
உதவும் என்க.

பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.

பட்டாணி :- இது நூரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால் வாய்வையும்,மந்தத்
தையும், உண்டாக்கும்.

மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தைத்தணிக்கும், மலத்தைப்பெருக்
கும்.

பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும். சுரம்
முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக